games

img

நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பீட்டர் சீலர் ஓய்வு

கிரிக்கெட் உலகில் கத்துக்குட்டி அணியாக இருந்தாலும் அபாயகர அணி என்ற சிறப்பு பெயரை பெற்றி ருக்கும் நெதர்லாந்து கிரிக்கெட் அணி யின் கேப்டன் பீட்டர் சீலர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவ தாக அறிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக முதுகுவலி பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் பீட்டர் சீலரின் ஓய்வு முடிவு அறிவிப்பு எதிர்பார்த்தது தான் என்றாலும் அதிர டியாக அறிவித்திருப்பது அந்நாட்டு ரசி கர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. பீட்டர் சீலர் நெதர்லாந்து அணிக்காக 57 ஒருநாள், 77 டி-20 போட்டி களில் விளையாடியுள்ளார். பேட்டிங்கை விட பந்துவீச்சில் (சுழற்பந்துவீச்சு) அசத் தலாக செயல்படக்கூடியவர். 2011 உலகக் கோப்பையில் தில்லி மைதானத்தில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை (சச்சின், சேவாக், யூசுப் பதான்) வீழ்த்தி இந்திய அணியை கதிகலங்க வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.