games

img

விளையாட்டு

உலகக்கோப்பையை வென்று கொடுத்த கருப்பின கேப்டன் “டெம்பா பவுமா”

கோப்பையை வென்று கொடுத்த ‘கோட்டா’ வீரர் உலகம் முழுவதும் குவியும் வாழ்த்து

டெஸ்ட் கிரிக்கெட்டின் சுவா ரஸ்யத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் 2019ஆம் ஆண்டு முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்தி வருகிறது சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி). இந்த தொடர் உலகக்கோப்பை போன்றது தான். இந்நிலையில், 3ஆவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவும், தென் ஆப்பிரிக்கா அணிகளும் தகுதிபெற் றன. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பிரபல லார்ட்ஸ் மைதானத்தில் நடை பெற்ற இந்த இறுதிப் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்று, உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி கோப்பை வென்று வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்காவிற்கு உலகம் முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கோட்டா வீரர் கோப்பையை வென்று கொடுத்தார்

நிறவெறிக் கொள்கை தீவிரமாக இருந்த நாடுகளில் மிக முக்கியமானது தென்  ஆப்பிரிக்கா. நிறவெறிக் கொள்கை கார ணத்தால் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) தென் ஆப்பிரிக்கா அணிக்கு தடை விதித்திருந்தது.  அந்நாட்டில் நிறவெறிக் கொள்கை ஒழிக்கப்பட்டதை அடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் 1992ஆம் ஆண்டு மீண்டும் தென் ஆப்பிரிக்கா அணி காலடி வைத்தது.  ஆனாலும் தென் ஆப்பிரிக்க அணியில் தொடர்ந்து வெள்ளையர்களுக்கு தான் வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. கருப்பு இன  வீரருக்கு வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் வெறும் வேகப்பந்துவீச்சாளராக தான் இருப்பர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. ஐசிசியும் எச்சரித்த நிலையில், தென் ஆப்பிரிக்கா அணியில் அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பு கிடைக்கும் வேண்டும் என்பதற்காக “கோட்டா” முறை அமல்படுத்தப்பட்டது.  அதில் பிளேயிங் லெவனில் (11 பேர் கொண்ட அணி) வெள்ளையர் அல்லாத 6 வீரர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று  நடைமுறை கொண்டுவரப்பட்டது. இதில் இரண்டு கருப்பின இளைஞர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும், ஆசிய வம்சாவளி யை சேர்ந்த தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் வீரர்களுக்கும் இடம் தர வேண்டும் என்று புதிய விதி கொண்டுவரப்பட்டது.

முதல் கருப்பின கேப்டன்

இந்த விதியின் மூலம் தான் தென் ஆப்பிரிக்கா அணியில் டெஸ்ட் உலக சாம்பி யன்ஷிப் கோப்பையை வென்று கொடுத்த டெம்பா பவுமா இடம்பிடித்தார். பேட்டிங், பீல்டிங்கில் சிறப்பிக்க செய்லபடக்கூடிய பவுமா, சிறிது சொதப்பினால் திறமை இல்லா மல் கோட்டாவில் வந்துவிட்டார் என்று பல ரும் அவரை விமர்சித்து வந்தனர். மேலும்  1.62 செமீ உயரமே கொண்ட பவுமாமை,  உயரத்தை வைத்து கிண்டல்செய்தனர். ஆனால்  விமர்சனங்களை கண்டுகொள்ளா மல் தீவிர பயிற்சி மேற்கொண்ட பவுமா, தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக உயர்ந்தார்.  தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக நிய மிக்கப்படும் முதல் கருப்பின வீரர் என்ற பெருமையை டெம்பா பவுமா பெற்று, உலக அரசியல் அரங்கில் வாழ்த்து மழையில் நனைந்தார்.

தோனியின் பாணியில்...

ஆனால் அப்போதும் கூட பவுமாவின் திறமையை யாரும் அங்கீகரிக்கவில்லை. தென் ஆப்பிரிக்கா தோல்வி கண்டால் பலரும் அவரை கேலி கிண்டல் தான் செய்தார்கள். அணியில் இருக்கும் வீரர்கள் கூட பவுமா வுக்கு ஒத்துழைப்பு தரவில்லை. ஆனால் இதையெல்லாம் தனது பொறுமை மூலம் எதிர்கொண்ட பவுமா அணியை ஒருங்கிணை க்கும் பணியில் ஈடுபட்டார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியைப் போன்று வியூகம் அமைத்தார். தென் ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர் வெற்றி யை குவித்தது. இதனால் வீரர்களின் ஆதரவு பவுமாவுக்கு கிடைத்தது.

அனைவரும் நண்பர்கள்

 இந்த ஆதரவை அடுத்து தமது இனத்தை  சேர்ந்த வீரர்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்காமல் அனைத்து தரப்பு வீரர்களுக்கும் ஆதரவளித்து நட்பு ரீதியுடன் அணியை கட்டமைத்தார். முதலில் கேப்டனாக தான் ரன் குவித்தால் மட்டுமே மற்ற வீரர்கள் சரியாக விளையாடுவார்கள் என்பதை உணர்ந்த பவுமா சிறப்பாக விளையாடத் தொடங்கினார். இந்த பிரம்மாண்ட முயற்சி யின் விளைவாக 27 ஆண்டுகளுக்குப் பின்  தென் ஆப்பிரிக்காவிற்கு டெஸ்ட் சாம்பி யன்ஷிப் உலகக்கோப்பையை வென்று கொடுத்து புதிய வரலாறு படைத்துள்ளார். நிறவெறி மனப்பாண்மை கொண்ட தென் ஆப்பிரிக்காவிற்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்த கருப்பின கேப்டன் டெம்பா பவுமாவுக்கு  உலகம் முழுவதும் வாழ்த்து குவிந்து வருகிறது.

சமூகவலைத்தளங்களில் களைகட்டிய தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக் கொண்டாட்டம் இந்தியர்களின் அமோக ஆதரவை கண்டு வியப்பு

கிரிக்கெட் உலகில் அபாயகரமான அணியாக இருப்பது தென் ஆப்பிரிக்கா தான். அந்த அணியின் பெயரை உச்சரித்தாலே உலக நாடுகள் சற்று தயத்துடன் தான் கிரிக்கெட் மைதானத்தில் காலடி வைக்கும். அந்த அள வுக்கு பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் மிரட்ட லான அனுபவம் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி 1998ஆம் ஆண்டு மினி உலகக்கோப்பை யை (சாம்பியன்ஸ் டிராபி) வென்றது. அதற்கு  முன்னரும் சரி, பின்னரும் சரி தென் ஆப்பிரிக்கா அணி பெரிய உலகக்கோப்பையை (50 ஓவர்) வென்றதில்லை.

27 ஆண்டுகால சோகம்

குறிப்பாக கடந்த 27 ஆண்டுகளாக அந்த  அணி 50 ஓவர் மற்றும் 20 ஓவர் உலகக்கோப்பை யை வெல்ல கடினமாக போராடியது. ஒவ்வொரு உலகக்கோப்பையில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பிரம்மாண்டமாக  களமிறங்கினாலும் இறுதி கட்ட சொதப்பல் மற்றும் மழை காரணமாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை தென் ஆப்பிரிக்கா தொடர்ச்சியாக இழந்து வந்தன. முக்கியமாக 27 ஆண்டுகளாக உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்பை ஒவ்வொரு முறையும் இழந்து கண்ணீருடன் தான் தென் ஆப்பிரிக்க வீரர்கள் தாய்நாட்டிற்கு செல்வார்கள்.  2024ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பையில் இறுதி வரை முன்னேறிய தென் ஆப்பிரிக்கா இந்தி யாவிடம் நூலிழையில் தோல்வியை தழுவி, உலகக்கோப்பையை பறிகொடுத்தது. இந்த தோல்வியால் தென் ஆப்பிரிக்க வீரர்கள் அகமதாபாத் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதனை கண்ட இந்திய ரசிகர்கள் தென் ஆப்பிரிக்கா கோப்பையை வென்றால் கூட, வெகு விமர்சியாக கொண்டாடி மகிழ்ந்து இருப்போம் சமூக வலைத்தளங்களில் சோக கதை களுடன் பதிவுகளை பதிவிட்டனர். குறிப்பாக தங்கள் நாடு கோப்பையை வெல்ல முடியாவிட்டா லும் பரவாயில்லை, தென் ஆப்பிரிக்கா அணி கோப்பையை வெல்லட்டும் என விளையாட்டு உலகமே கருத்து தெரிவிக்கும் அளவிற்கு அந்த அணி வலுவான ஆதரவை பெற்றது. இதனால் ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணிக்கு கிளைமேக்ஸ் இருப்பது போல சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தென் ஆப்பிரிக்கா அணிக்கும் தனி கிளைமேக்ஸ் இருந்தது.

இந்தியா - தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் கொண்டாட்டம்

இவ்வாறு பல்வேறு வரலாற்று சம்பவங் களால் தான் தென் ஆப்பிரிக்கா அணி டெஸ்ட்  சாம்பியன்ஷிப் கோப்பை வென்றதை ஒட்டு மொத்த விளையாட்டு உலகமே கொண்டாடி வரு கிறது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்ன வென்றால் தென் ஆப்பிரிக்காவை விட இந்திய ரசிகர்களே சமூக வலைத்தளங்களில் அதிகமாக கொண்டாடி வருகின்றனர். இதனை கண்ட தென் ஆப்பிரிக்கா ரசிகர்கள்,”எங்களின் பாசக்கார சகோதரர்களான இந்தியர்களை நினைத்து நாங்கள் பெருமை படுகிறோம்” என மீம்ஸ் செய்து இரு நாடுகளுக்கு இடையேயான சகோதரத்து வத்தை விளையாட்டு மூலம் மேம்படுத்தியுள்ளனர்.

உலகப்புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் கோப்பையுடன் தென் ஆப்பிரிக்கா.