games

img

புரோ கபடி தொடரை மிரட்டும் தமிழ்நாடு

9-வது சீசன் புரோ கபடி தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தமிழ்நாடு அணி (தமிழ் தலைவாஸ்) தொடக்கத்தில் கடுமையாக திணறியது. கிட்டத்தட்ட கடைசி அணியாக புள்ளிப்பட்டியலில் இறங்கி இருந்தது. இதற்கு காரணம் தமிழ்நாடு அணியின் நட்சத்திர வீரரும், கேப்டனுமான பவன் ஷெராவத் தொடக் கத்திலேயே காயம் அடைந்தது ஒட்டு மொத்த அணியை வெகுவாக பாதித்தது. பவன் இல்லாமல் பலமான அணிகளு டன் விளையாட முடியுமா? புள்ளிப்பட்டி யலில் முன்னேற முடியுமா? என்ற எண்ணத்தில் துவண்டு கிடந்தது தமிழ்நாடு.  இந்நிலையில், நரேந்தர், பவார், ஹிமான்சு நார்வல் ஆகியோரின் திடீர்  எழுச்சி ஒட்டுமொத்த தமிழ்நாடு  அணி வீரர்களுக்கும் புதிய உத்வே கத்தை அளித்துள்ள நிலையில், கடைசி 5 ஆட்டங்களில் 4 வெற்றி, ஒரு டிரா என  அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப் பட்டியலில் விரைவான முன்னேற்றம் கண்டு 5-வது இடத்தை பிடித்துள்ளது. கூடிய சீக்கிரம் கேப்டன் பவான் செராவத் அணியில் இணைய உள்ள நிலையில், நடப்பு சீசன் கபடி  தொடரில் தமிழ்நாடு அணி கண்டிப்பாக  பட்டம் வாங்கும் என எதிர்பார்க்கப்படு கிறது.