டிஎன்பிஎல் கோப்பை யாருக்கு?
கோயம்புத்தூர்-திருநெல்வேலி இன்று பலப்பரீட்சை
கடந்த 2016 முதல் ஆண்டு தோறும் ஐபிஎல் தொடரை போன்று தமிழ்நாடு கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் தமிழ்நாட்டு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 6-வது சீசன் ஜூன் மாதம் 2-வது வாரம் தொடங்கிய நிலையில், ஜூலை 5 அன்று லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றன. கோயம்புத்தூர், திருநெல்வேலி, திண்டுக்கல், மதுரை ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், கோயம்புத்தூர் - திண்டுக்கல் அணிகள் மோதிய குவாலிபையர் 1 ஆட்டத்தில் கோயம்புத்தூர் வெற்றி பெற்று நேரடியாக இறுதிக்கு முன்னேறியது. திருநெல்வேலி - மதுரை அணி கள் மோதிய எலிமினேட்டர் ஆட்டத்தில் திருநெல்வேலி வெற்றி பெற்று குவாலி பையர் 2 சுற்றுக்கு முன்னேறியது. திங்க ளன்று நடைபெற்ற குவாலிபையர் 2 ஆட்டத்தில் திண்டுக்கல் - திரு நெல்வேலி அணிகள் மோதின. திரு நெல்வேலி இந்தியா சிமெண்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் திருநெல்வேலி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறியது. இந்நிலையில், புதனன்று நடை பெறும் இறுதி ஆட்டத்தில் கோய முத்தூர் - திருநெல்வேலி அணிகள் கோப்பைக்கு பலப்பரீட்சை நடத்து கின்றன. முதல் முறையாக கோப்பை யை கைப்பற்றும் முனைப்பில் திருநெல்வேலி அணியும், 2-வது முறையாக கோப்பையை கைப்பற்ற முனைப்பில் கோயம்புத்தூர் அணியும் என இரு அணிகளும் கோப்பையின் மீதே குறியாக களமிறங்குவதால் இறுதி ஆட்டம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோயம்புத்தூர் - திருநெல்வேலி
இடம் : இந்தியா சிமெண்ட் மைதானம் திருநெல்வேலி (சங்கர் நகர் : திருநெல்வேலி - மதுரை சாலை)
நேரம் : இரவு 7:15 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
இந்தியா - மேற்கு இந்திய தீவுகள்
(முதல் டெஸ்ட்)
நேரம் : இரவு 7:30 மணி
இடம் : வின்ட்சோர் பார்க், டோம்னிகா
சேனல் : தூர்தர்சன் (அனைத்து மொழிகளிலும்), ஜியோ சினிமா (ஒடிடி - இலவசம்)
மழை வருமா?
வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பெரியளவில் மழைக்கு வாய்ப்பில்லை. மாலை நேர குளிர்ந்த காற்றால் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
விம்பிள்டனில் எதிரொலித்த ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை
பாரம்பரியமிக்க கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான விம்பிள்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4-ஆவது சுற்று ஆட்டத்தில் அதிரடிக்கு பெயர் பெற்ற பெலாரஸ் வீராங்கனையும், தரவரிசையில் 19-ஆவது இடத்தில் உள்ள அசரென்கா 2-6, 6-4, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் தரவரிசை இல்லாமல் களமிறங்கிய உக்ரைனின் சுவிட்டோலினாவிடம் வீழ்ந்தார். போட்டி முடிந்த பின்பு முக்கிய நிகழ்வான கை குலுக்கல் நிகழ்வில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினார் அசரென்கா. அதாவது நடுவரிடம் மட்டும் கை குலுக்கிவிட்டு சுவிட்டோலினாவிடம் கை குலுக்காமல் சென்றுவிட்டார். அசரென்காவின் இந்த செயல் சாதாரண சர்ச்சை விசயம்தான் என்றாலும், தற்போதைய சூழ்நிலையில் இது மோசமான சம்பவமாக உள்ளது. காரணம் அசரென்கா பெலாரஸ் வீராங்கனை ஆவார். சுவிட்டோலினா உக்ரைனைச் சேர்ந்தவர். உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரில் பெலாரஸ் நாடு ரஷ்யா ஆதரவு நிலைப்பாட்டுடன் உள்ளது. தற்போது பெலாரஸைச் சேர்ந்த அசரென்கா உக்ரைனைச் சேர்ந்த சுவிட்டோலினாவுக்கு கை குலுக்காமல் சென்ற விவகாரம் ரஷ்யா - உக்ரைன் போரின் ஒரு எதிரொலி சம்பவமாக மாறியுள்ளது.
பகை எதுவும் உள்ளதா?
சுவிட்டோலினா - அசரென்கா இடையே எவ்வித தனிப்பட்ட, போட்டி பகை எதுவும் கிடையாது. அசரென்காவை (33) விட 5 வயது இளையவர் சுவிட்டோலினா (28). ஆனால் சுவிட்டோலினா ஓடிவந்து கைகொடுக்க முயன்றார். ஆனால் அசரென்கா வேண்டாம் என்று சொல்லி சென்றுவிட்டார்.