வாய் திறக்காமல் சாதிக்க நினைக்கும் பிசிசிஐ
கிரிக்கெட் உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு (பிசிசிஐ) சொந்தமாக மொத்தம் 53 மைதானங்கள் உள்ளன. இதில் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஜெய்ப்பூர், அகமதாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள 25 மைதானங்களில் எந்தவித சர்வதேச ஆட்டங்கள் நடத்தலாம். மீதமுள்ள 28 மைதானங்களில் இரண்டாம் தர சர்வதேச ஆட்டங்கள், உள்ளூர் ஆட்டங்கள் நடத்தலாம். முக்கியமாக உலகின் அதிக கிரிக்கெட் மைதானங்கள் உள்ள நாடு என்ற பெருமை இந்தியாவிடம் உள்ளது. இத்தகைய சிறப்பை பெற்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பெருமை நாளுக்குநாள் சரிந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மைதான சீரமைப்புதான். முக்கிய சர்வதேச போட்டிகளுக்கு மைதான சீரமைப்பை மேற்கொள்ளா மல் பெயரளவில் தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றுவது போல மைதான பராமரிப்பை மேற்கொள்ளப்படு கின்றன. கடந்த 7 மாத இடைவெளி யில் இதுவரை 4 மைதானங்கள் தங்களது தகுதியை இழந்து ஐசிசி-யிடம் தகுதி இழப்பு புள்ளிகள் பெற்றுள்ளது. காரணம் என்ன? மைதான பராமரிப்பு பற்றி மாநில கிரிக்கெட் வாரியங் களுக்கு போதியளவு வழிகாட்டு நெறிமுறை களை பிசிசிஐ வழங்குவதில்லை. இதனால் மைதானங்கள் தகுதி இழப்பை சந்திக்கின்றன. கங்குலி வாரியத் தலைவராக இருந்த காலத்தில் மைதானங்கள் அவரது கட்டுப்பாட்டில் நன்றாக இருந்தது. ஆனால் தற்போது வாரியத் தலைவர் யார்? யார் கட்டுப்பாட்டில் பிசிசிஐ இருப்பதே சரியாக கண்டறிய முடியவில்லை. வாரியத் தலைவராக ரோஜர் பின்னி இருந்தாலும், அனைத்து கட்டுப்பாடுகளும் அமித் ஷா மகன் ஜெய் ஷாவிடம் உள்ளது. பிசிசிஐ நிலைமையே இப்படி என்றால் மைதானத்தின் நிலைமை கேட்கவா வேண்டும். மைதான பிரச்சனை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆனால் பிசிசிஐ எதுவும் விளக்கம் அளிக்காமல் மவுனம் சாதித்து வருகிறது. ஐசிசி போட்டிகள் நடத்தும் வாய்ப்பை இழக்க நேரிடும் இந்திய மைதானங்கள் இப்படி அடிக்கடி தகுதி இழப்பு புள்ளிகள் பெற்றால் உலகக்கோப்பை, முத்தரப்பு சாம்பியன்ஷிப் தொடர்கள், நாடுகளுக்கு இடையேயான தொடர்களை நடத்த வாய்ப்புகள் கிடைக்காமல் போகலாம்.
ஜெய்ஷா ரகசிய திட்டங்களால் “கல்லா கட்டும்” குஜராத் மைதானம்
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உள்ள “மோடி மைதானத்திற்கு” மட்டும் அதிக சலுகை கிடைக்கிறது. எந்தவித தொடராக இருந்தாலும் மோடி மைதானத்தில் ஒரு போட்டி கண்டிப்பாக நடைபெறும். அதிலும் முக்கியமாக அதிக ரசிகர்கள் கூடும் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. அகமதாபாத் மோடி மைதானத்திற்கு மட்டும் ஏன் இந்த சலுகை? என இதுவரை எந்த கேள்வியும் எழவில்லை. உண்மை நிலவரம் என்னவெனில் அகமதாபாத் மைதானம் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவின் (ஒன்றிய அமைச்சர் அமித் ஷா மகன்) கட்டுப்பாட்டில் உள்ள மைதானம் ஆகும். இங்கு அதிக போட்டிகள் மற்றும் முக்கிய போட்டிகள் நடத்தப்படுவதால் அதிக வருவாய் கிடைக்கும். இதனால்தான் எந்த தொடராக இருந்தாலும் கண்டிப்பாக அகமதாபாத் மைதானத்திற்கு ஒரு போட்டி கிடைத்துவிடும். இதுபோக பாஜக ஆளும் மாநிலங்களின் கிரிக்கெட் மைதானங்களுக்கும் சர்வதேச போட்டிகள் திட்டமிட்டு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மேற்கு வங்கம், ராஜஸ்தான் மாநில மைதானங்களில் கிரிக்கெட் போட்டி நடத்த வாய்ப்புகள் எதுவும் அதிகம் கொடுப்பதில்லை. காரணம் தென்னிந்திய மைதானங்கள் என்று ஒரு காரணம் மற்றும் அரசியல் காரணங்கள் உண்டு.
இன்றைய டபிள்யுபிஎல் ஆட்டம்
பெங்களூரு - மும்பை
நேரம் : இரவு 7:30 மணி
இடம் : பிராபோர்ன் மைதானம், மும்பை
சேனல் : ஸ்போர்ட்ஸ் 18 (பிபா உலகக்கோப்பை நேரடி ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சி), ஜியோ சினிமாவில் (ஓடிடி - இலவசம்) காணலாம்