games

ஆசியக் கோப்பை தொடர் - இந்திய அணி அறிவிப்பு!

ஆசியக் கிரிக்கெட் கவுன்சில்ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்தியா அணியை இன்று அறிவித்துள்ளது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன.

இந்த 6 அணிகளும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்று முடிவில் 4 அணிகள், சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். அந்த வகையில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் ஒரு பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் மற்றுமொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.

சூப்பர் 4 சுற்றில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் செப்டம்பர் 17-ஆம் தேதி இறுதிப் போட்டியில் விளையாடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்திய அணியில் பங்கேற்கும் 17 வீரர்கள்: ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார், திலக் வர்மா, இஷான் கிஷன், அக்சர் படேல், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, சர்துல் தாகூர், பும்ரா, ஷமி, சிராஜ், குல்தீப், பிரதிஷ் கிருஷ்ணா ஆவர்.