games

img

மன்கட் விவகாரத்தில் முற்றும் மோதல் தீப்திக்கு இங்கி., கேப்டன் பதிலடி டுவிட்

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சனியன்று நடைபெற்ற இங்கி லாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அந்த  தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இந்த ஆட்டத்தில் மன்கட் மூலம் இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீனை இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ரன் அவுட் செய்தார். தற்போது இந்த விவகாரம் கிரிக்கெட் உலகில் டிரெண்டிங் விஷயமாக உள்ள நிலையில், “பந்து வீசும் முன்பு கிரீசை விட்டு முன்னோக்கி செல்ல வேண்டாம் என்று சார்லி டீனை பலமுறை எச்சரிக்கை செய்தோம். நடுவரிடமும் புகார் தெரிவித் தோம்” என தீப்தி சர்மா இந்தியாவிற்கு வந்து விளக்கம் அளித்தார். இதற்கு பதிலடியாக இங்கிலாந்து கேப்டன் ஹெதர் நைட் டுவிட்டர் பதிவில், “ஆட்டம் முடிந்து விட்டது. முறைப்படி சார்லி டீன் ஆட்டமிழந்துள்ளார். ஆட்டத்திலும், தொடரிலும் வெல்ல தகுதியான அணி இந்தியா. சார்லி டீன் விவகாரத்தில் எச்ச ரிக்கை எதுவும் வழங்கப்படவில்லை. அத னால் சார்லி டீனின் விக்கெட்டை முறைப்படி எடுக்கவில்லை என ஆகிவிடாது. ஆனால் ரன் அவுட் செய்தது சரியென்றால் எச்சரிக்கை குறித்து பொய் சொல்லி தங்கள் செயலை நியாயப்படுத்த வேண்டியதில்லை” என சாடியுள்ளார்.

;