கால்பந்து உலகின் நட்சத்திர வீரரும், போர்ச்சுக்கல் அணி யின் கேப்டனுமான ரொனால்டோ சவூதி அரேபியாவின் நட்சத்திர கிளப் அணியான அல் நாசரில் ஆண்டுக்கு ரூ.1770 கோடி சம்பளத்துடன், இரண்டரை ஆண்டு களுக்கு ரூ.4425 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கால்பந்து வரலாற்றில் அதிக தொகை மற்றும் அதிக சம்பளம் பெறும் வீரர் என்ற புதிய வரலாறு படைத்துள்ள ரொனால்டோ வின் சந்தோசத்திற்கு புதிய சிக்கல் ஒன்று முளைத்துள்ளது. அந்த சிக்கல் யாதெனில் சவூதி அரேபிய சட்டத்தின்படி திருமணம் ஆகாமல் யாரும் ஒரே அறையில் தங்கக் கூடாது என்ற சட்டம்தான். ரொனால்டோ அவருடைய காதலி யான ஜார்ஜினா உடன் திருமணம் ஆகாமல் உறவில் இருக்கிறார். இந்த தம்பதிக்கு குழந்தை பிறந்தாலும் இன்னும் அதிகா ரப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ள வில்லை. சவூதி அரேபிய சட்ட விதிகளுக்கு எதிரானது என்பதால் ரொனால்டோவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சட்டத்தை மீறி ரொனால்டோ தங்கினால் கட்டாயம் சிறை தண்டனைதான் என தகவல் வெளியாகி யுள்ளது. இது சிக்கலான விவகாரம் என்பதால் சவூதி அரசு ரொனால்டோவிற்கு ஆதர வாக ஏதாவது செய்யுமா? இல்லை பணமா? காதலியா? சிறையா? என்ற இடியாப்ப சிக்க லில் மாட்டிக்கொண்டார் ரொனால்டோ. அல் நாசர் அணியில் ரொனால்டோ இணைந் தாலும் திருமண விவகாரம் காரணமாக இன்னும் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.