games

img

2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிபெற்ற போர்ச்சுக்கல் 

தகுதி சுற்று ஆட்டத்தில் நார்த் மசிடோனியா அணியைத் தோற்கடித்து போர்ச்சுக்கல் அணி 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.  

22வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வருகிற நவம்பர், டிசம்பரில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் போர்ச்சுக்கல் - நார்த் மசிடோனியா அணிகள் மோதின. 

இந்த ஆட்டத்தில் 32வது நிமிடத்தில், 65வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணியின் பர்னோ பெர்னாண்டஸ் கோல் அடித்தார். நார்த் மசிடோனியா அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதனால்  2-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் அணி வெற்றி பெற்றது வரும் நவம்பர், டிசம்பரில் நடைபெறும்  உலக கோப்பை கால்பந்து போட்டிக்குத் தகுதி பெற்றது.  

;