36 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்றுள்ளதால் அர்ஜெண்டினா நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையை விட மிக பிரம்மாண்ட அளவில் கொண்டாட்டங்கள் அரங்கேறியது. அர்ஜெண்டினாவின் தலைநகர் பியூனஸ் அயர்ஸ் சதுக்கம் பகுதியில் மெஸ்ஸி 3 டி உருவத்துடன் சிறப்பு ஏற்பாடுகளுடன் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தில் லட்சக்கணக்கில் மக்கள் கூடியதால் அங்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதுபோக அர்ஜெண்டினாவின் பல முக்கிய நகரங்களும் விழாக்கோலத்தில் சிக்கி உறங்காமல் விழித்திருந்தது.