games

img

சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் புறக்கணிப்பு அர்த்தமற்றது

குளிர்கால ஒலிம்பிக் கின் 24-வது சீசன் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி சீனா வின் தலைநகரான பெய் ஜிங்கில் நடைபெறுகிறது.  சீனாவில் மனித உரிமை மீறல் அதிகமாக உள்ளது எனக் கூறி அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் குளிர்கால ஒலிம்பிக் தொடரை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இது ஒரு “அரசியல் தோற்றம்” எனவும், புறக்கணிப்பிற்கான விளைவுகளை விரைவில் எதிர்கொள்ள வேண்டிவரும் என சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், குளிர் கால ஒலிம்பிக் புறக்கணிக் கும் நாடுகளுக்கு உலக தட களத் தலைவர் செபாஸ்டி யன் கண்டனம் தெரிவித்துள் ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது,”குளிர்கால ஒலிம்பிக் தொடரை ராஜ தந்திர முறையில்  புறக் கணிப்பு “அர்த்தமற்றது”. இந்த விவகாரம் வரலாற்று ரீதியாக படிப்பறிவில்லா தவை. அறிவுப்பூர்வமாக நேர் மையற்றவை. அதிகம் பாதி க்கப்படுபவர்கள் விளை யாட்டு வீரர்கள் தான். இது ஒரு அரசியல் புறக்கணிப்பு” என கண்டனம் தெரிவித்துள் ளார்.

வெளிப்படையான காரணங்கள் இல்லை

குளிர்கால ஒலிம்பிக் தொடர் புறக்கணித்த நாடுகள் மனித உரிமை மீறல் என்ற ஒற்றை வார்த்தையை கார ணங்களாக கொண்டு அர சியல் ரீதியாக ராஜதந்திர நட வடிக்கையில் களமிறங்கி யுள்ளன. வெளிப்படையாக வேறு எந்த காரணங்களும் இதுவரை கூறப்படவில்லை.