games

img

காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கவில்லை - இந்திய ஹாக்கி கூட்டமைப்பு அறிவிப்பு 

இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கப்போவதில்லை என இந்திய ஹாக்கி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து வருபவர்கள் 10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதை ஏற்க முடியாது எனக் கூறியுள்ள ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் ஞானேந்திரா, காமன்வெல்த் போட்டிக்கும், ஆசியப் போட்டிகளுக்கும் இடையே குறைந்த நாட்களே இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், 2024 ஆம் ஆண்டில் பிரான்சில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு, ஆசியக் கோப்பை போட்டியே தகுதி போட்டியாக இருப்பதால், அதில் இந்தியா கவனம் செலுத்தவிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,  ஆசியப் போட்டிகளுக்கான முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு காமன்வெல்த் போட்டிகளின் போது இந்திய அணியைச் சேர்ந்த எவரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் ஆபத்தை ஹாக்கி இந்தியா எடுக்க முடியாது. எனவே, காமன்வெல்த் போட்டிகள் 2022க்கு ஆடவர் மற்றும் மகளிர் அணிகளை ஹாக்கி இந்தியா அனுப்பாது என்று இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவருக்கு ஹாக்கி இந்தியா தலைவர் எழுதியுள்ள கடிகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியிலிருந்து இங்கிலாந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

;