ஐபிஎல் 2022 தொடரிலிருந்து இங்கிலாந்து வீரர் மார்க் வுட் விலகியுள்ளார்.
15 ஆவது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26 ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டியில் சென்னை – கொல்கத்தா மோத உள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் காயம் காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் 2022 தொடரிலிருந்து விலகியுள்ளது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவரை கடந்த மாதம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் லக்னோ அணி ரூ.7.5 கோடிக்கு மார்க் வுட்டை ஏலத்தில் எடுத்தது. கடந்த வாரம் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.