games

img

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: காலிறுதியில் சிந்து, லக்ஷயா சென்  

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு பி.வி.சிந்து, லக்ஷயா சென் முன்னேறியுள்ளனர்.

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் ஜகார்த்தாவில் பிடபிள்யுஎஃப் சூப்பர் 500 போட்டி நடைபெற்று வருகிறது.  

நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென், டென்மார்க் வீரர் ராஸ்மஸ் ஜெம்கே ஆகியோர் எதிர்கொண்டனர். இதில் சென் அதிரடியாக விளையாடி செட்களை 21-18, 21-15 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். 54 நிமிடங்கள் நீட்டித்த இந்த ஆட்டத்தில் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில்  முன்னணி வீரரான  சோவ் டின் சென்(சீன தைபே) உடன் லக்‌ஷயா  சென் மோத உள்ளார்.  

இதையடுத்து, மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி. சிந்து, இந்தோனேசியாவின் கிரிகோரியா துன்ஜூங் உடன் மோதினர். ஆட்டத்தில் முடிவில் சிந்து 23-21, 20-22, 21-11 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.