games

img

விளையாட்டு செய்திகள்

கேலோ இந்தியா: ஒரே நாளில் 6 தங்கம் குவிப்பு
6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் இறுதி கட்ட த்திற்கு வந்துவிட்டது. போட்டியின் 11  மற்றும் 12 ஆவது நாட்களில் மகாரா ஷ்டிரா, ஹரியானா மாநில வீரர்கள் குத்துச்சண்டை, மல்யுத்தம் போட்டி களில் தங்கப் பதக்கங்களை குவித்த னர். இவர்களுக்கு சவால் கொடுத்த தமிழ்நாடு வீரர்கள் தடகளம், நீச்சல், இறகு பந்து, பூப்பந்து, டென்னிஸ் விளையாட்டு போட்டிகளில் தங்கப் பதக்கங்களை அள்ளினர்.

தமிழ்நாடு வீரர்கள் தடகளத்தில் அதிகப்பட்சமாக 11 தங்கப் பதக்கத்தை அள்ளினர். மேலும் 6 வெள்ளி, 1 வெண்கலமும் வென்றுள்ளார். அடுத்த தாக, சைக்கிள் ஓட்டுதலில் 5 தங்க மும் 1 வெள்ளியும், 6 வெண்கலம் வென்றனர். ஸ்குவாஷ், யோகாசனம், நீச்சல் போட்டிகளில் தலா மூன்று தங்கத்தை அறுவடை செய்தனர்.

முன்னதாக, ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் ஸ்ரீநிதி நடேசன் இரண்டாவது இடம்பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். ஆண்க ளுக்கான 50 மீட்டா பேக்ஸ்ட்ரோக்கில் நித்திக் நாதெல்லா, பளுதூக்குதல் பெண்களுக்கான 76 கிலோ பிரிவில் ஹஸ்னினாஷ்ரின் வெண்கலப் பதக்கங் களை வென்றனர்.

பதக்க பட்டியல்
போட்டியின் 12 ஆவது நாளான செவ்வாய்க்கிழமை 6 தங்கம் வென்று மீண்டும் இரண்டாவது இடத்தை பிடி த்தனர். சற்று நேரத்தில் ஹரியானா 35 தங்கம் 22 வெள்ளி, 46 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தை தக்கவைத்துக்கொண்டது. 35 தங்கம், 20 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்களுடன் தமிழ்நாடு மூன்றா வது இடத்திற்கு சறுக்கியது.

மகாராஷ்டிரா 53 தங்கம், 46 வெள்ளி, 50 வெண்கலம் என 149 பதக்கங்க ளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக் கிறது. போட்டிகள் ஜன.31 முடி வடைகிறது.

புதுவை மாணவி சாதனை
கேலோ இந்தியா - மல்லர் கம்பம் போட்டியில் முதன்முறையாக வெண்கல பதக்கம் வென்று புதுச்சேரியைச் சேர்ந்த மாணவி ஓவியா சாதனை படைத்துள்ளார். 

திருச்சி அண்ணா விளையாட் டரங்கில் நிலை மல்லர் கம்பம், தொங்கும் மல்லர் கம்பம், கயிறு மல்லர்  கம்பம் ஆகிய மூன்று விதங்களில் ஆண்கள், தனிநபர், ஒட்டுமொத்த செயல்பாடு என 3 பிரிவுகளில் போட்டி கள் நடத்தப்பட்டன.

அணிப் பிரிவு போட்டிகளில் மகாரா ஷ்டிரா அணி தங்கமும், தமிழ்நாடு அணி வெள்ளியும் வென்றன. தனிநபர் பெண்களுக்கான ஒட்டுமொத்த பிரிவு போட்டியில் புதுச்சேரியைச் சேர்ந்த ஓவியா 16.85 புள்ளிகள் எடுத்து 3 வது இடம் பிடித்து வெண்கலம் வென்று  புதுச்சேரிக்கு பெருமை சேர்த்துள் ளார். புதுச்சேரி சுதானா நகரைச் சேர்ந்த ராஜா - தனியார் பள்ளி 11 ஆம் வகுப்பு  படித்து வருகிறார்.