games

img

உலகக் கோப்பை கால்பந்து தொடர் பந்தில் சென்சார் பொருத்தப்படுகிறது

22-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் வரும் நவம்பர் மாதம் அரபு நாடான கத்தாரில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கத்தார் உலகக்கோப்பையில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்த உள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) அறிவித்துள்ளது. பிபா அறிவித்துள்ள தொழில்நுட்பங்களில் முக்கியமானது கால்பந்தில் சென்சார் பொருத்தப்படும் என்ற அறிவிப்பு தான். அடிடாஸ் நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இறுதி போட்டியில் மட்டுமா? இல்லை அனைத்து ஆட்டங்களிலும் பயன்படுத்தப்படுகிறதா? என்பது பற்றி இன்னும் முழுமையான தகவல் வெளியாகவில்லை. மேலும் ஆஃப்சைடு பிரச்சனையை சமாளிக்க தானியங்கி (semi-automated) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும், இதற்காக மைதானத்திற்குள் 12 கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மைதானத்தில் என்ன நடந்தாலும் அதனை தொலைக்காட்சியில் முழுமையாக காண, கண்காணிக்க 3 டி (3D) தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுகிறது.