டென்னிஸ் உலகில் இனி சீனியர்களுக்கு வேலை இல்லை
முரட்டுத்தனமாக விளாசும் இளசுகள்
கொரோனா காலகட்டத்தி ற்கு பிறகு டென்னிஸ் உலகில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் முக்கியமான தாக சீனியர் நட்சத்திரங்களின் மோச மான தோல்வி மழைஉள்ளது. வயதாகிவிட்டது அதனால் சீனியர் நட்சத்திரங்கள் திணறுகின்றனர் என்ற ஒருவகை காரணம் இருந்தாலும், முக்கிய காரணமாக இருப்பது கொரோனா தான். கொரோனா காலகட்டத்தில் சீனி யர் வீரர் - வீராங்கனைகள் சாதாரண பயிற்சியை கூட தொடராமல் இருந்த னர். ஆனால் பள்ளி, கல்லூரி முடித்த டென்னிஸ் ஆர்வ இளசுகள், தனிப் பட்ட பயிற்சி, யூடியூப் மூலம் பயிற்சி, ஆன்லைன் பயிற்சி, பெற்றோர் மூலம் பயிற்சி என பல்வேறு ஸ்டைல்களில் பயிற்சி பெற்று, தற்போதைய டென் னிஸ் உலகில் மிரட்டல் நபர்களாக உள்ளனர். அதுவும் சாதாரண வகை யில் இல்லை. பட்டம் வாங்கும் அள விற்கு ஒவ்வொரு இளம் நட்சத்திரங் கள் மிரட்டி வருகின்றனர். இது ஏற்கெனவே அறிந்த விஷயம் என்றா லும், நடப்பாண்டில் நிலைமை படு மோசமாக உள்ளது. நடப்பாண்டில் இவர்கள் சீனியர் வீரர் - வீராங்கனை, இவர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள், கோப்பை வெல் லும் அளவிற்கு உயர்ந்தவர்கள். இவர்களை வெல்ல முடியாது என்ற பேச்சுக்கே இடமில்லாமல் உள்ளது. சாதாரண தகுதி சுற்றில் களமிறங்கும் இளசுகள் சீனியர் நட்சத்திரங்களை ஒரு புரட்டு புரட்டியெடுத்து விடுகின்றனர்.
ஆட்டத்திறனை அறிவதற்குள் தோல்வி
யார் இவர்கள்? எந்த விதத்தில் விளையாடுவார்கள்? என இளம் வீரர் - வீராங்கனைகள் பற்றி ஆராய்வதற் குள், இளம் வீரர் - வீராங்கனைகள் சீனி யர் நட்சத்திரங்களை போட்டியி லிருந்து வெளியேற்றி விடுகின்றனர். இதற்கு ஒரே ஒரு காரணம் இளசுகளின் முரட்டு மனநிலைதான். முன்பெல் லாம் இளசுகள் தயக்கத்துடன் கள மிறங்கி, 3 வருட போராட்டத்திற்கு பிறகு டென்னிஸ் உலகில் ஜொலிப் பார்கள். இதுதான் காலம் கடந்த உண்மை. ஆனால், தற்போதைய நிலைமையே வேறு. டென்னிஸ் உல கிற்கு அறிமுகமில்லாத இளசுகள், ‘‘இவர்கள் என்ன பெரிய இவர்களா? ஒரு கை பார்ப்போமே’’ என்ற அள வில் மனம் தளராமல் சீனியர் நட்சத்தி ரங்களை பதம் பார்த்து வெற்றியை வசமாக்குகின்றனர். இதனால் சீனி யர் நட்சத்திரங்கள் கொரோனா காலத் திற்கு பிறகு வெற்றிநடை என்றால் என்னவென்று அறிய முடியாத அளவிற்கு இருக்கிறார்கள்.
ஐபிஎல் 2023
லாவெண்டரில் குஜராத்
புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் திங்களன்று நடைபெறும் 62-வது லீக் ஆட்டத்தில் (ஹைதராபாத் அணிக்கு எதிராக) குஜராத் அணி லாவண்டர் ஜெர்சி (நீல இளஞ்சிவப்பு) அணிந்து வீரர்கள் விளையாடினர். ஏற்கெனவே நடப்பு சீசனில் பெங்களூரு அணி பசுமையை எடுத்துரைக்கும் விதமாக பச்சை நிற ஜெர்சியை அணிந்து விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
5 16வது சீசன் ஐபி எல் தொடர் தற் போது இறுதிக்கட்ட த்தை எட்டியுள்ள நிலையில், இன்னும் 5 நாட்களில் லீக் ஆட்டங்கள் நிறைவு பெறுகிறது. அதாவது மே 21 அன்று லீக் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து மே 23 அன்று பிளே ஆப் சுற்றுகள் தொடங்கு கிறது. மே 28 அன்று இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.
22 ஞாயிறன்று சென்னை - கொல்கத்தா அணி களுக்கு இடையிலான ஆட்டத்திற் கான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்ததாக பெண் உட்பட 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ. 62 ஆயிரம் ரொக்கம், 38 ஐபிஎல் டிக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளது. எனினும் கைப்பற்றப் பட்ட டிக்கெட்டுகள் ஒரிஜினல் டிக்கெட்களா? இல்லை போலியானதா? என தெளிவான தகவல் எதுவும் வெளியாகவில்லை.