விளையாட்டு உலகில் முக்கிய தொடர்களில் ஒன்றான கிரிக்கெட் உலகக்கோப்பையின் (50 ஓவர்) 13-ஆவது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 10 நகரங்களில் நவம்பர் 19 வரை நடைபெறும் இந்த தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
குஜராத் ரசிகர்களின் “ஜெய் ஸ்ரீராம்” கோஷத்திற்கு பதிலடி பாகிஸ்தான் வீரர்களிடம் மன்னிப்பு கோரும் இந்திய ரசிகர்கள் இந்திய அளவில் டிரெண்ட் ஆகும் #sorry_pakistan
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 12-ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. பாஜக ஆளும் குஜ ராத் மாநிலத்தின் அகமதாபாத் மைதா னத்தில் சனியன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்., வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. இந்நிலையில், இந்தியா - பாகிஸ் தான் ஆட்டத்தில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறின. ஆட்டம் தொடங்கும் முன் குஜராத் மைதா னத்தில் விளையாட்டு உலகின் வர லாற்றிலேயே முதன்முறையாக மதச்சார்புள்ள “ஜெய் ஸ்ரீராம்” பாடல் ஒழிக்கப்பட்டது. மேலும் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் ஆட்டமிழந்து பெவிலியன் சென்ற பொழுது குஜராத் ரசிகர்கள் “ஜெய் ஸ்ரீராம்” என்ற கோஷ மிட்டு வெறுப்பேற்றினர். கிட்டத்தட்ட இந்தியா - பாகிஸ்தான் உலகக் கோப்பை ஆட்டத்தை ஆளும் பாஜக 2024 மக்களவைத் தேர்தலுக்கு மதச்சாயம் தெளிக்கப்பட்ட அரசியல் ஆட்டமாக மாற்றிக்கொண்டது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரான குஜ ராத் ரசிகர்களின் “ஜெய் ஸ்ரீராம்” கோஷ த்திற்கு பதிலடியாக, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் சமூகவலைதளங்களில் மன்னித்து விடுங்கள் பாகிஸ்தான் (#சாரி_பாகிஸ் தான் - #sorry_pakistan) என்ற ஹேஸ் டேக்குடன் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். “ஜெய் ஸ்ரீராம்” கோஷத்திற்கு பதிலடியாக இந்திய ரசிகர்கள் அனைவரும் மதம், அரசியல் சார்பின்றி ஒன்றுகூடியதால், நாட்டில் மதத்தால் பிளவு ஏற்படுத்த முயற்சிக்கும் ஆளும் பாஜக அதிர்ச்சியில் உறைந் துள்ளது.
இன்றைய ஆட்டம்
இடம் : தர்மசாலா, இமாச்சலப்பிரதேசம்
நேரம் : மதியம் 2:00 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஓடிடி : ஹாட் ஸ்டார் (இலவசம் - ஸ்மார்ட்போன் மட்டும், ஸ்மார்ட் டிவிக்களில் பார்க்க சந்தா கட்டணம்)
2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்
சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விளையாட்டு உலகில் மிக முக்கியமான, முதன்மை யான விளையாட்டுத் தொடராக இருப்பது ஒலிம்பிக். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த ஒலிம்பிக் தொடரின் 34-ஆவது சீசன் அமெரிக்கா வின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028இல் நடைபெறுகிறது. இந்த தொடரில் விளையாட்டு உலகின் 3-ஆவது மிகப்பெரிய விளையாட்டான கிரிக்கெட் போட்டி (டி-20) சேர்க்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ மாக அறிவித்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம். கிரிக்கெட் விளையாட்டுடன் பேஸ்பால்/மென்பந்து, லாக்ரோஸ் (கரண்டி வலை பந்து - ஹாக்கி), ஸ்குவாஷ், பிளாக் கால்பந்து (ரக்பி வகை) ஆகிய 4 விளை யாட்டுகள் 34-ஆவது ஒலிம்பிக் சீசனில் இணைகிறது. இந்த 5 புதிய விளை யாட்டுகளை ஒலிம்பிக்கில் சேர்க்க அக்., 13 அன்று சர்வதேச ஒலிம்பிக் சம்மேளன நிர்வாகக்குழு ஒப்புதல் அளித்தது. 33-ஆவது ஒலிம்பிக் சீசன் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அடுத்தாண்டு (2024) நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.