games

img

காமன்வெல்த் விளையாட்டு போட்டி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு  

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் முதல்முறையாக மகளிர் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.  

22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஜூலை 28 ஆம் தேதிமுதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இதில் மகளிருக்கான டி20 கிரிக்கெட் போட்டிகள் முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன.  

24 வருடங்களுக்கு முன்பு மலேசியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 50 ஓவர் ஆடவர் கிரிக்கெட் இடம்பெற்றது. தற்போது 2022ல் பிர்மிங்கம் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மகளிர் கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

8 அணிகள் பங்கேற்கும் மகளிர் கிரிக்கெட் போட்டியில் குரூப் ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, பார்படாஸ், பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகளும் குரூப் ‘பி’ பிரிவில் இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.  

இந்நிலையில், காமன்வெல்த் போட்டிக்கான போட்டிக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுரும், துணை கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.  

இந்திய மகளிர் அணி:  

ஷஃபாலி வர்மா, எஸ்.மேக்னா, தனியா சப்னா பாட்டியா(விகீ), யாஸ்திகா பாட்டியா(விகீ), தீப்தி ஷர்மா, ராஜேஸ்வரி கயக்வாட், பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், ரேணுகா தாக்கூர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவ், ஹர்லீன் தியோல், சினே ராணா  

மாற்று வீராங்கனைகள்:

ரிச்சா கோஷ், பூணம் யாதவ், சிம்ரன்.