games

img

155 கிமீ வேகம் புதிய வரலாறு படைத்த “காஷ்மீர் எக்ஸ்பிரஸ்”

இந்திய கிரிக்கெட் இளம் அதிவேக பந்துவீச்சாளரும், இந்திய ரசிகர்களால் “காஷ்மீர் எக்ஸ்பிரஸ்” என அழைக்கப்படுபவருமான உம்ரான் மாலிக் இலங்கை அணிக்கெதிரான முதல் டி-20 போட்டியில் இலங்கை பேட்டிங்கின்  16-வது ஓவரில் (4-வது பந்து) இலங்கை கேப்டன் ஷனகாவை 155 கிமீ வேகத்தில் வெளியேற்றினார். 155 கிமீ பந்து வீசியதன் மூலம் இந்திய கிரிக்கெட் உலகில் அதிவேகமாக பந்துவீசிய நபர் என்ற புதிய வரலாறை படைத்தார் உம்ரான் மாலிக். இதற்கு முன் பும்ரா 153.36 கி.மீ வீசியதே வரலாறாக இருந்தது. தற்போது பும்ரா 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். பும்ராவிற்கு அடுத்து ஷமி (153.3 கிமீ), நவ்தீப் சைனி (152.85 கிமீ) ஆகியோர் அடுத்த இடத்தில் உள்ளனர்.

தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இன்று 2-வது டி-20 ஆட்டம்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி தற்போது டி-20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளை கொண்ட டி-20 தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2-வது டி-20 ஆட்டம் மகாராஷ்டிராவின் முக்கிய நகரான புனேவில் வியாழனன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.  (சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)

ரிஷப் பண்ட் மும்பை  மருத்துவமனைக்கு மாற்றம்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் தனது தாயைப் பார்க்க  கடந்த வாரம் தில்லியில் இருந்து உத்தரகண்ட் மாநிலம் ரூர்கிக்கு தானே, தனியாக காரை ஓட்டிச்சென்று விபத்தில் சிக்கினார். படுகாயங்களுடன் தற்போது டேராடூனில் உள்ள  மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காலில் ஏற்பட்டுள்ள தசைநார் கிழிவு காயத்திற்கு மேல் சிகிச்சை பெற மும்பையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு மாற்றப்படுகிறார் என தில்லி கிரிக்கெட் கூட்ட மைப்பின் (டிடிசிஏ) இயக்குனர் ஷியாம் சர்மா தகவல் தெரிவித்துள்ளார்.

அல் நாசர் அணியில் இணைந்தார் ரொனால்டோ

கால்பந்து உல கின் நட்சத்திர வீரரும்,  போர்ச்சுக்கல் அணியின் கேப்டனுமான கிறிஸ்டியானோ ரொனால் டோ சவூதிஅரேபியாவை சேர்ந்த கிளப் அணியான  அல் நாசர் அணியுடன் விளையாட புதிய ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில், செவ்வாயன்று (இந்திய நேரப்படி புதனன்று அதி காலை) சவூதியில் நடை பெற்ற பிரம்மாண்ட துவக்க  விழாவில், பல்லாயிரக் கணக்கான ரசிகர்களின் ஆரவாரத்துடன் அல் நாசர் அணியில் இணைந்தார். அல் நாசர் அணி ரொனால்டோவிற்கு ஆண்டுக்கு ரூ.1770  கோடி சம்பளம் வழங்குகிறது. மொத்தம் இரண்டரை வருட  ஒப்பந்தம் மூலம் ரூ.4,425 கோடி சம்பளம் பெறவுள்ளார் ரொனால்டோ. 

மதிய நேரத்தில் இருண்ட ஆஸ்திரேலியா: சிட்னி டெஸ்ட் பாதியில் நிறுத்தம்

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி முதல் 2 டெஸ்ட் ஆட்டங்களில் தோல்வி யை சந்தித்து தொடரை இழந்த நிலை யில், 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் புதனன்று தொடங்கியது.  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி  47 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தபோது போதிய வெளிச்சமின்மையால் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.  பொதுவாக போதிய வெளிச்சமின் மை பிரச்சனை என்பது மாலை நேரங் களில்தான் ஏற்படும். ஆனால் இதுவரை இல்லாத வகையில் ஆஸ்திரேலிய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு முன்பே மழை மேகங்களால் போதிய வெளிச்சம் இல்லாத சூழல் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி யுள்ளது. பாதி நேரத்தில் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் மைதானத்தில் குழுமியிருந்த 30,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.