போட்டியின் போது மைதானத்தில் சுருங்கி விழுந்து உருகுவே கால்பந்து வீரர் ஜுவான் ஸ்கியர்டோ உயிரிழந்தார்.
பிரேசிலில் நடைபெற்று வரும் கோபா லிபர்டடோர்ஸ் கால்பந்து தொடரில், சாவ் பாலோ - உருகுவேயின் கிளப் நேஷனல் டி கால்பந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சாவ் பாலோ அணி 2க்கு 0 என்ற கோல் கணக்கில் உருகுவேயின் கிளப் நேஷனல் டி கால்பந்து அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
முன்னதாக, இந்த ஆட்டத்தின் 84ஆவது நிமிடத்தில் கிளப் நேஷனல் டி கால்பந்து அணியின் தடுப்பு ஆட்டக்காரர் ஜுவான் ஸ்கியர்டோ (27) திடீரென மைதானத்தில் சுருண்டு விழுந்தார். இதையடுத்து, சகவீரர்கள் கூச்சலிட, உடனடியாக வரவழைக்கப்பட்ட ஆம்புலன்ஸில் ஜுவான் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.