election2021

img

தேர்தல் பிரச்சாரம், பேரணி, பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்கப்படும்..... தேர்தல் ஆணையம் எச்சரிக்கை...

புதுதில்லி:
அரசியல் கட்சிகளின் நட்சத்திரப் பேச்சாளர்கள், தலைவர்கள் முகக் கவசம்அணிந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். கொரோனா விதிகளை முறையாகக் கடைபிடிக்காவிட்டால், தேர்தல்பிரச்சாரம், பேரணி, பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்கத் தயங்கமாட்டோம் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுபாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.  கொரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி தேர்தல் பொதுக்கூட்டங்களில் தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் ஆணையம்அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

‘நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் காண்கிறோம். தேர்தல்கூட்டங்கள், பிரச்சாரத்தில் கொரோனா தடுப்பு விதிகளான முகக் கவசம் அணிதல்,சமூக விலகல் ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வகுத்த விதிகளை யாரும் கடைப்பிடிப்பதில்லை.நட்சத்திரப் பேச்சாளர்கள், அரசியல்கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள்என யாரும் கொரோனா தடுப்பு விதிகளையும், பாதுகாப்பு வழிகளான முகக் கவசம் அணிந்து பிரச்சாரம் செய்வதையும் கடைபிடிப்பதில்லை. இதனால், பொதுக்கூட்டங்கள், பிரச்சாரத்துக்குச் செல்லும் வேட்பாளர்கள் , அரசியல் தலைவர்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகும் அபாயம்ஏற்படுகிறது.

அரசியல் கட்சித் தலைவர்கள், பேச்சாளர்கள்தான் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். பேரணி, பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன் தொண்டர்கள் அனைவரையும் முகக் கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும்.
கொரோனாவுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வு ஊட்டுபவர்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், பேச்சாளர்கள், வேட்பாளர்கள் இருக்கிறார்கள். சமூக விலகலை வலியுறுத்துவதோடு, முகக் கவசம் அணிதலையும் மக்களுக்கு இவர்கள் அறிவுறுத்த வேண்டும்.தேர்தல் ஆணையம் வகுத்த கொரோனா தடுப்பு விதிகளை அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால், பொதுக்கூட்டத்தைத் தடை செய்யவும், வேட்பாளர்கள் பேரணியைத் தடை செய்யவும்,அரசியல் தலைவர்கள், பேச்சாளர்களுக்குத் தடை விதிக்கவும் தேர்தல் ஆணையம் தயங்காது.

இவ்வாறு அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.வேட்பாளர்கள் முகக் கவசம் அணிந்துபிரச்சாரம் செய்ய உத்தரவிடக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

;