election2021

img

பாஜக, பாமக கொடிகளைப் பார்த்து அப்செட்டான வனத்துறை அமைச்சர்.... அதிமுக கொடியை பிடிக்க ஆட்களை தேடிய கட்சியினர்.....

பாஜக மற்றும் பாமக கொடிகளைப் பார்த்து வனத்துறை அமைச்சர் சீனிவாசன் அப்செட்டானார். இதனால் பிரச்சாரம் செய்ய தயக்கம் காட்டினார். 

திண்டுக்கல் குமரன் திருநகரில் திங்களன்று வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது தொண்டர்கள் அதிமுக கொடிகளை ஏந்தவில்லை. பாஜக, பாமக கொடிகளை ஏந்தியிருந்தனர். இதனால் அப்செட்டாகி காரைவிட்டு இறங்காமல் இருந்தார்.  இந்நிலையில் தொண்டர்கள் எங்கிருந்தோ கொண்டுவந்த 2 அதிமுக கொடிகளை கும்பம் வைத்திருந்த பெண்களிடம் கொடுத்தபோது  யாரும் வாங்குவதாக இல்லை. இதனையடுத்து இரண்டு, வயதான பெண்களிடம் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் அமைச்சர் பிரச்சாரத்தை துவங்கினார். என் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. அப்படி ஊழலை நிருபித்தால் நான் தூக்கில் தொங்கவும் தயார் என்று பிரச்சாரத்தில் அறிவித்தார். (நநி)

;