election2021

img

கீழ்வேளூர் பேரூராட்சி பகுதிகளில் வேட்பாளர் நாகைமாலி வாக்குச் சேகரிப்பு....

கீழ்வேளூர்:
கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் களமிறங்கி மக்களின் பேராதரவோடு ஒவ்வொரு கிராமங்கள் தோறும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நாகைமாலி ஞாயிறன்று கீழ்வேளூர் பேரூராட்சி பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் வி.மாரிமுத்து, திமுக பேரூர் செயலாளர் அட்சயலிங்கம், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் அமிர்தராஜ், மதிமுக மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் கருணாநிதி, விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றியச் செயலாளர் பாண்டியன், நகரச் செயலாளர் குணா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

;