election2021

img

தமிழகத்தின் உரிமைகளை அடகு வைத்த அதிமுக அரசு.... பென்னாகரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு....

பென்னாகரம்:
தமிழகத்தின் உரிமைகளை மத்திய பாஜக அரசிடம் அதிமுக அரசுஅடகு வைத்து விட்டது என பென்னாகரம் பிரச்சாரத்தில் திமுக இளைஞரணிசெயலாளர் உதயநிதி ஸ்டாலின் சாடினார்.

தருமபுரி மாவட்டத்தில், திமுக அணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக  இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். இதன் ஒருபகுதியாக பென்னாகரம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற பிரச்சாரத்தில் உதயநிதி பேசியதாவது,மோடி உட்கார சொன்னால் உட்காருவார், முட்டி போட சொன்னால் முட்டிபோடுவார், அப்படிப்பட்ட அடிமை முதல்வராகத் தான் எடப்பாடி பழனிச்சாமி இருந்து வருகிறார். சசிகலாவின்காலை பிடித்து முதல்வரானவர், தமி
ழக மக்களின் காலை வாரிவிட்டார். மாநிலத்தின் உரிமைகள் அனைத்தையும் மத்திய அரசிடம் அதிமுக அரசு அடகுவைத்துவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் கொண்டு வரப்படக்கூடிய மக்களுக்கான திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெற்றிபெற செய்ய வேண்டும். அதிமுகவிற்கு விழும் ஒவ்வொரு ஓட்டும், பாஜகவிற்கு விழும்ஓட்டு; தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைப்பதற்குசமமாகும். அனைத்துத் துறைகளி
லும் ஊழல் நிறைந்த இந்த அதிமுகஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். எனவே, இனியும் ஏமாந்துவிடவேண்டாம். தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டியது நம்கடமை. எனவே மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியை வரலாறு காணாத
வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

;