election2021

img

சொந்தக் கட்சியினரால் பாலியல் துன்புறுத்தல்.... தேர்தலில் இருந்து விலகிய திருநங்கை வேட்பாளர்....

திருவனந்தபுரம்:
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதல் திருநங்கை வேட்பாளர் என்ற அறிமுகத்தோடு, மலப்புரம் மாவட்டத்தின் வெங்காரா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தவர் அனன்யா குமாரி அலெக்ஸ் (28). 

ஜனநாயக சமூகநீதிக் கட்சி சார்பில் வேட்பாளர் ஆக்கப்பட்டிருந்த அவர், தற்போது போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அவர் அளித்துள்ளார். அதில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தவே, தேர்தலில், தான் போட்டியிட்டதாகவும், ஆனால்,சொந்தக் கட்சியினரிடமிருந்தே தனக்கு பாலியல் துன்புறுத்தல்கள் வருவது அதிர்ச்சி அளிப்பதாகவும், இதனால் தேர்தலில் போட்டியிடுவதை வாபஸ் பெறுகிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும், தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, காவல்துறையில் புகார்மனு ஒன்றையும் அளித்துள்ள அனன்யா, தனக்கு விரைவில் நீதிகிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

;