election2021

img

போடோலாந்து கட்சி தலைவருக்கு மிரட்டல்.... அசாம் பாஜக அமைச்சருக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்....

புதுதில்லி:
அசாம் மாநிலத்தில், போடோலாந்து மக்கள் முன்னணியின் தலைவர் ஹக்ரமா மொஹிலாரிக்கு மிரட்டல் விடுத்ததாக எழுந்த புகாரில், பாஜக அமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவிடம் விளக்கம் கேட்டு, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஹிமந்த பிஸ்வா சர்மா, கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது, ‘காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் போடோலாந்து மக்கள் முன்ணியின் தலைவர்ஹக்ராமா மோஹிலாரி தீவிரவாதத்தை ஊக்குவித்தால் சிறைக்கு அனுப்பப்படுவார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இந்த விவகாரம் தேசியப் புலனாய்வின் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்படும்’ என்றுகூறினார். 

இது மறைமுக மிரட்டல் விடுப்பது போல இருந்ததால், சர்மாவின் பேச்சு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது. அதனடிப்படையில், தேர்தல் ஆணையமும் இதுபற்றி ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது

;