election-2019

img

பேராவூரணி பள்ளி ஆண்டு விழா

தஞ்சாவூர், ஏப்.6-

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டாரக்கல்வி அலுவலர் கோ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பெற்றோர் - ஆசிரியர் கழகத்தலைவர் சீ.கௌதமன், கிராம கல்விக் குழு ஹெச்.சம்சுதீன், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் ஏ.முகமது பாரூக், கிராமகல்விக்குழு கல்வியாளர் காந்தி, பள்ளி வளர்ச்சிக் குழு எஸ்.ஜகுபர்அலி, வட்டாரவள மைய மேற்பார்வையாளர் ரெ.பரமசிவம், ஆசிரியர் பயிற்றுநர் சித்ரா, பள்ளிமேலாண்மைக்குழு வீ.நீலவேணி, எல்.ஏ.எம்.சாதிக் அலி ஆகியோர் கலந்து கொண்டனர். சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி வாழ்த்திப் பேசினார். முன்னதாக ஆசிரியர் அ.காஜா முகைதீன் வரவேற்றார். தலைமையாசிரியர் ச.சித்ராதேவி ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியை பெ.ரேணுகா நன்றி கூறினார்.

;