election-2019

img

பத்தாம் வகுப்பு மாணவர்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை?

சென்னை:
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு எழுதும் மாணவர் களை கொரோனாவில் இருந்து பாதுகாக்க எடுத் துள்ள நடவடிக்கை என்ன? என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டு நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் கல்வியாளரும், முன்னாள் துணைவேந்தருமான வசந்திதேவி அதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை ஐகோர்ட் டில் மனு தாக்கல் செய்துள் ளார். அதில் கூறியிருப்பதாவது:-

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு ஜூன் 15 ஆம் தேதி தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ஆன் லைன் வகுப்புகள் பெருநகரங்களிலும், நகரங்களிலும் வசிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத உள்ள சுமார் ஒன்பதரை லட்சம் மாணவர்களில் ஐந்தரை லட்சம் பேர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிப்பவர்கள் ஆவார் கள்.விடுதிகளில் தங்கிப் படித்த மாணவர்களில் பலர் புத்தகங்களை விடுதியில் விட்டுவிட்டு சொந்த கிராமங் களுக்கு சென்று விட்டநிலையில், அவர்களால் தேர்வுக்கு தயாராக முடியாது. பொதுப் போக்குவரத்து இல்லாத சூழலில் வேறு எங்கும் சென்று புத்தகங்கள் வாங்க முடியாது. கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் ஜூன் 15 ஆம் தேதி தேர்வை தொடங்கினால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படும். எனவே, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை தள்ளி வைக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர் முன்னிலையில்  விசாரணைக்கு வந்தது. மனுதாரர்தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைகை, பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் சி.முனுசாமி ஆகியோர் ஆஜராகி வாதாடினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவர்கள் மற்றும் தேர்வுப்பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தங்களது விளக் கத்தை ஜூன் 11 ஆம் தேதிக் குள் விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய வேண் டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

;