election-2019

img

மத்திய பா.ஜ.க அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக பா.ஜ.கவைச் சேர்ந்த மத்திய அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


கடந்த மார்ச்16 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் சிகந்தராபாத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மகேஷ் சர்மா எதிர்க்கட்சித்தலைவர்களான ராகுல் காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகௌடா உள்ளிட்டோர் மீது தனிநபர் விமர்சனத்தில் ஈடுபட்டார். இதையடுத்து தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் தரப்பில் அவர்மீது புகார் அளிக்கப்பட்டது.


இன்று தனிநபர் விமர்சனம் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மகேஷ் சர்மாவை அடுத்த 24மணி நேரத்தில் விளக்கம் அளிக்கக்கோரி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.