பாஜக கடந்த 5 ஆண்டுகளில் கருத்து சுதந்திரத்திற்கு மறைமுகமாக தடைவிதித்து. சங்க பரிவார் அமைப்புகளின் கொள்கைக்காக எதிரான கருத்துகளை கொண்ட கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்ற பலர் மோடி ஆட்சியில் படுகொலை செய்யப்பட்டனர். மாட்டுக்கறி வைத்திருந்ததாக குற்றம் சாட்டி அக்லாக் உள்ளிட்ட பலர் படுகொலை செய்யப்பட்டனர். தற்போது புதிதாக கடந்த 5 ஆண்டு கால மோடி ஆட்சியில் மதக்கலவரங்களே இல்லாத இந்தியா என்று பாஜகவினர் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தலைத் தொடர்ந்து மோடி தனது தோல்விகளை மறைக்க புதிதாக சவுகிதார் என்ற அடைமொழியை தனது பெயருடன் சேர்த்துள்ளார்.மோடியை பின்பற்றி பாஜகவைச் சேர்ந்தவர்கள் தங்கள் பெயருடன் சவுகிதார் என்ற பெயரையும் சேர்த்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பாஜகவினருக்கு அதுவே பிரச்சனையாக மாறி உள்ளது.
நேற்று முன்தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியில் அசத்தலான பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கின் போது ரசிகர்கள் ஆரவாரத்துடன் பல முழக்கங்களை எழுப்பினர்.
அதில் காவலாளியே திருடன் என பொருட்படும் Chowkidar Chor Hai என்ற முழக்கங்கள் அதிகளவில் இடம்பெற்றன. நாட்டின் காவலாளி என்று பிரதமர் மோடி தன்னை அழைத்து கொள்வதை விமர்சிக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், காவலாளியை திருடன் என்று குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்காக உருவாக்கப்பட்ட Chowkidar Chor Hai என்ற முழக்கம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த முழக்கம் தற்போது அரசியலைத்தாண்டி ஐபிஎல் போட்டிகளை வரை எதிரொலிப்பது பாரதிய ஜனதா கட்சியினரை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.