education

img

அண்ணா பல்கலை.யில் காலநிலை ஸ்டுடியோ

சென்னை, ஜூலை 1 - அண்ணா பல்கலைக் கழகத்தில் காலநிலை தகவமைப்பு மற்  றும் ஆராய்ச்சி நிலையம் (காலநிலை ஸ்டுடியோ) அமைக்கப்படும்  என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார். சட்டப்பேரவையில் திங்களன்று (ஜூலை 1) நடைபெற்ற தமது  துறைக்கான மானிய கோரிக்கை  மீதான விவாதத்திற்கு பதில ளித்து அறிவிப்புக்களை வெளியிட்டபோது இதனை அவர் தெரி வித்தார். அவர் மேலும் கூறுகையில், வல்லுனர் குழு அமைத்து வார்ப்பு  ஆலைகள் ஆய்வு செய்யப்படும். 8 மாவட்டங்களில் புதிதாக  கற்றுத் தர கண்காணிப்பு மையம் ஏற்படுத்தப்படும் என்றார்.

கடல் ஆமை பாதுகாப்பு மையம்
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தமது அறி விப்புகளை வெளியிட்டு பேசுகையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2 கோடி ரூபாய் செலவில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மையம்  அமைக்கப்படும். வண்டலூரில்  உள்ளஉயர்நிலை வன உயிரினப்  பாதுகாப்பு நிறுவனத்தில், வன உயிரினக் கல்வி மையம் ஏற்ப டுத்தப்படும். திண்டுக்கல் சிறுமலையில்  பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும் என்றார்.