புதுதில்லி:
வகுப்புகள், தேர்வுகள், பாடங்களே இல்லாத ஆண்டாக அதாவது ‘பூஜ்ஜியக் கல்வி ஆண் டாக’ இருக்காது என்று உயர்கல்வி செயலர் அமித் கேர் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.வெப்பினாரில் பேசிய மத்தியக்கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் “நிஷாங்க், பள்ளிகள், கல் லூரிகள், கல்வி நிறுவனங்களைத் திறப்பது பற்றி 10-15 நாட்களில் முடிவெடுக்கப்படும். மாநில அரசுகள், கல்வி நிறுவனங்கள், சுகாதாரத்துறை, உள்துறை அமைச்சகங்களுடன் பேசி நல்ல தீர்வு எட்டப்படும் என்றார்.
இது தொடர்பாக நடைபெற்ற நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் பாஜக உறுப்பினர் வினய் சகஸ்ரபுத்தே தலைமை வகித்தார்.இருபது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் குறைவானவர்கள் கலந்து விவாதித்ததாகத் தெரிகிறது.
சிவப்பு மண்டலத்தில்அப்போது பல உறுப்பினர்கள் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு பற்றி கேள்வி எழுப்பினர், அதற்கு மாநில அரசுகள் அங்குள்ள கொரோனா நிலவரங்களை பரிசீலித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று அமைச்சக அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.காரணம் 400 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் கொரோனா சிவப்பு மண்டலத்தில் உள்ளன.
மார்ச் இறுதியிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள், பிற கல்வி நிறுவனங்கள் இயங்கவில்லை என்பதால் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இணையதள வசதி இல்லாத பகுதிகளில் சமூகவானொலி, மாவட்டச் செய்தித்தாள் கள் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை சென்று சேர்ப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. வெப்பினாரில், பள்ளிகளையும் கல்லூரிகளையும் இயற்பியல் ரீதியாக மீண்டும் திறக்க ஏதேனும் திட்டம் உள்ளதா? என்று போக்ரியாலிடம் கேட்கப்பட்டதற்கு “நாங்கள் இப்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை, ஆலோசித்து முடிவெடுப்போம்,” என்று கூறியுள் ளார்.”
பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதில், பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ, கல்வியும் அந்தளவிற்கு முக்கியம், அதே நேரத்தில் ஆரோக்கியத்திற்கே முன்னுரிமையளிக்கப்படும் என்று அமைச்சக அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
ஐ.நா. எச்சரிக்கை
கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் சுமார் 2 கோடியே 40 லட்சம் ஏழைக் குழந்தைகள் பள்ளிப்படிப்பை நிறுத்தும் அபாயம் உள்ளது. இவர்கள் கூலிவேலைக்குச் செல்லும் நிலைமை ஏற்படும் என்றும் ஐநா எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.