districts

img

தாழ்வான பகுதி மக்களுக்கு தற்காலிக முகாம்

செங்கல்பட்டு,டிச.10-  மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில் தாழ்வான பகுதி யில் வசித்து வந்த மக்களை மாவட்ட நிர்வாகம் சார்பாக  தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். வங்கக் கடலில் உருவான காற்ற ழுத்த தாழ்வு நிலை காரணமாக மாண்டாஸ் புயல் உருவாகி சனிக்கிழ மையன்று(டிச.10) காலை மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரண மாக பெரிய அளவில் பாதிப்புகள் ஏது வும் ஏற்படவில்லை. மேலும் செங்கல் பட்டு மாவட்டத்தில் 292 தற்காலிக தங்கும்முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த முகாம்களில் தாழ்வான பகுதியில் உள்ள சுமார் 861 பேர் தற்போது தங்க வைக்கப் பட்டுள்ளனர். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் பிரதி நிதிகள் மூலம் உணவு, பாய், தலையணை, போர்வை வழங்கப்  பட்டுள்ளது.  மேலும் இவர்களை 24 மணி நேரமும்கண்காணிக்கும் வகையில் மருத்துவகுழு சேவை செய்து வரு கிறது. முகாமில் உள்ளவர்கள் தங்களுக்கு நிரந்தர குடியிருப்பை அரசு அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். புயல் கரையை கடந்த மாமல்ல புரம் பகுதியில் கடற்கரை மீன வர் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த படகுகள் வலைகள் சேதம் அடைந்துள்ளன. மேலும் பாதிக்கப் பட்டவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இந்நிலையில் மாமல்லபுரம், கோ வளம் ஆகிய பகுதிகளில் தற்கா லிக முகாமில் தங்க வைக்கப்  பட்டுள்ளவர்களையும், பாதிக்கப்பட்ட மீனவ கிராமமான தேவனேரி பகுதி களை அமைச்சர் தாமோ.அன்பரசன் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உள்ளிட்டவர்கள் நேரில் சந்தித்துஆய்வு செய்தனர். மேலும் முகாமில் தங்க வைக்கப் பட்டவர்களுக்கு உணவு  மற்றும் மருந்து பொருட்களையும் வழங்கினர்.