districts

காவலர் பயிற்சி பள்ளியில் பணிக்கு ஆட்கள் தேர்வு

வேலூர், டிச. 8- வேலூர் சிறைக் காவலர் பயிற்சி பள்ளி யில் முடிதிருத்துநர், காவலர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது குறித்து சிறைக் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் மத்திய சிறையில் காலியாக உள்ள ஒரு முடிதிருந்துநர், வேலூர் சிறைக் காவலர் பயிற்சிப் பள்ளியில் காலியாக உள்ள ஒரு இரவு காவலர் ஆகிய பணியிடங்க ளுக்கு தகுதியுடையோர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான செயல்முறை தேர்வு, எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு வேலூர் மத்திய சிறையில் நடைபெற உள்ளது. முடி திருத்துநர், இரவுக் காவலர் ஆகிய  இரு பணிகளுக்கும் எழுதப்படிக்கத் தெரிந் திருக்க வேண்டும். ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை சம்பளம் பெற முடியும். எஸ்சி., எஸ்சிஏ., எஸ்டி., பிரிவி னருக்கு 18 முதல் 37  வயது வரையும், பிசி., எம்.பி.சி., பிசி (எம்) பிரிவினருக்கு 34 வயது வரையும், ஓசி பிரிவினருக்கு 32 வயது வரையும் நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இருபாலரும் விண்ணப் பிக்கலாம். தகுதியுடையவர்கள் கல்வி, சாதிச் சான்று, வயது வரம்புச் சான்று, வேலை வாய்ப்பு அட்டை, முன்னுரிமைக்கான சான்றிதழ் நகல்களுடன் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ரூ.30க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய சுயமுகவரியிட்ட உறை ஆகியவற்றை இணைத்து விண்ணப்பத்தை தபால் மூலம் சிறைக் கண்காணிப்பாளர், மத்திய சிறை, வேலூர் என்ற முகவரிக்கு டிசம்பர் 20 அனுப்பி வைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.