districts

எருது விடும் விழாவில் காளைகளை ஒரு சுற்றுக்கு மேல் ஓடவிடக்கூடாது வேலூர் மாவட்ட ஆட்சியர் பாண்டியன் எச்சரிக்கை

வேலூர், ஜன. 22- எருது விடும் விழாவில் காளைகளை ஒரு சுற்றுக்கு மேல் ஓடவிட்டால் காளை யின் உரிமையாளருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சி யர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், அரசாணையில் அனு மதிக்கப்பட்ட நாள், இடங்களில் காலை 10  மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே எருது விடும் விழா நடத்தப்பட வேண்டும். காளை ஓடும் பாதை, வாடிவாசல் முதல் சேருமிடம் வரை அதிகபட்சமாக 100 மீட்டர் நீளம் இருக்க வேண்டும். காளைகள் ஓடு தளம் இலகுவாகவும், அகலமாகவும் இருக்க வேண்டும். கண்டிப்பாக இரட்டை தடுப்பான்கள் அமைக்கப்பட வேண்டும். ஓடு தளத்தில் அதிகபட்சமாக 25 தன்னார்வலர்கள் மட்டுமே அவர்களுக்கு என சிறப்பான முறையில் தயார் செய்யப் பட்ட உடைகளுடன் சுழற்சி முறையில் அனுமதிக்க வேண்டும். பொதுமக்கள் யாரும் ஓடு தளத்துக்குள் செல்ல அனு மதியில்லை. காளைகள் சேருமிடம் விசாலமாக இருக்க வேண்டும். வாடிவாசல்,  விழா அரங்கம் ஆகியவற்றை முழுமையாக  கண்காணிக்க கண்காணிப்பு கேமரா அல்லது  வெப் கேமரா வசதியை ஏற்படுத்த வேண்டும்.  விழா நடைபெறும் இடத்தில் இருந்து 5 கி.மீ.  சுற்றளவில் உள்ள கிணறுகளை விழாவுக்கு ஒரு நாள் முன்னதாக மூட வேண்டும். ஒரு காளை ஒரு சுற்று மட்டுமே அனு மதிக்கப்படும். அடுத்த சுற்றுக்கு ஓடவிட்டால் காளையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். விழா முடிந்ததும் காளைகளுக்கு கட்டாயமாக போதிய ஓய்வு அளித்தும், மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பிறகே கொண்டு செல்ல வேண்டும். அரசு பிறப்பித்த நிலையான வழி காட்டு நெறிமுறைகளை விழாக் குழுவின ரால் கடைப்பிடிக்கப்படுவது அரசு அலுவலர்களால் உறுதி செய்யப்பட்ட பிறகே, எருது விடும் விழாவுக்கு அனுமதி வழங்கப்படும். விதிமுறைகளை மீறும் பட்சத்தில் எருது விடும் விழா நடத்த அனு மதிக்க முடியாது என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.