ராணிப்பேட்டை, ஏப். 10- திமுக ஒன்றியச் செயலாளர் எ.கே.முருகன் அடாவடித்தனத்தை கண்டித்தும், இலாலாப்பேட்டை ஊராட்சியின் எல்லையை மறு வரையறை செய்யக்கோரி அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி கடையடைப்பு, உண்ணா நிலைப் போராட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை ஊராட்சியின் எல்லையை மறுவரையறை செய்யக்கோரி அனைத்து வீடு களிலும் கருப்பு கொடி ஏற்றினர். வணிகர்கள் கடைகளை முற்றிலு மாக அடைத்தனர். முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே முன்னாள் ஊராட்சி மன்றத் தலை வர் எல்.வி.ராமசாமி தலைமையில் திங்களன்று (ஏப். 10) உண்ணா நிலைப் போராட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எல்.சி.மணி பேசுகையில், ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதி வாலாஜா ஊராட்சி ஒன்றியம் லாலாபேட்டை கிராம மக்களின் பூர்வீக சொத்துக்கள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் அடிப்படையில் ஊராட்சி எல்லையை மறுவரை செய் யாமல் காலம் கடத்தும் அரசு அதிகாரிகளையும், முகுந்தராயபுரம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள தி.மு.க. ஒன்றிய செயலாளர் எ.கே.முருகனை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெறுவதாக கூறினார். கிராம மக்களின் பயன்பாட்டில் உள்ள அனைத்து ஏரிகள், குளங் கள், கோயில்கள், சுடுகாடுகள் அனைத்தும் முகுந்தராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது என்ற அடிப்படையில் அபகரிக்க முயற்சிக் கிறார்கள். ஒன்றியச் செயலாளர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால் அரசுத்துறை அதிகாரி கள் அவருக்கு துணை போகின்ற னர். இதுகுறித்து காட்பாடி சட்ட மன்ற உறுப்பினர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை சந்தித்து மனு அளித்துள்ளோம். அவரும் லாலாப்பேட்டை ஊராட்சியின் எல்லை மறுவரையறை செய்வதற் கான ஆக்கபூர்வ பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரியிருந்தார். அனைத்து துறை அதிகாரிகளுக்கும் முறையாக கடிதம், மூலமாகவும், நேரடியாகவும், கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறோம். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கிராம மக்களின் பூர்வீக சொத்துக்கள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் அடிப்படையில் பயன்பாட்டில் உள்ள 2,500 ஏக்கர் விளை நிலங்களையும், ஏரிக ளையும், குளங்களையும், ஆலயங்க ளையும், மலைகளையும். சுடுகாடு களையும் லாலாப்பேட்டை ஊராட்சி யின் எல்லைக்கு உட்படுத்தி எல்லையை மறுவரையறை செய்வதே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும் என்றும் அவர் கூறினார். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எல்.கே.மணி உண்ணா நிலையை துவக்கி வைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் எல்.கே.கோகுலன், எல்.பி.மணி, எல்.வி.மணி, எல்.எம்.கோடீஸ்வரன், தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல்.சி.மணி, விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.சந்திரன், மாவட்ட குழு உறுப்பி னர் சேகர், சிஐடியு மாவட்டப் பொரு ளாளர் என்.ரமேஷ், பத்மா (மாதர் சங்கம்), அதிமுக நகரச் செயலாளர் கே.பி.சந்தோஷ், சுகுமார், மணி, எம்.அஸ்லம்கான், என்.பி.சுப்பிர மணி ஆகியோர் பேசினர்.