districts

img

மதுரையில் செப்.23 முதல் அக்.03 வரை புத்தகத் திருவிழா

மதுரையில் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செப்டம்பர் 3 முதல் 13-ஆம் தேதி வரை மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதுகுறித்து, மதுரை ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மதுரை தமுக்கம் மைதானத்தில் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 03 வரை காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும். இங்கு 200 அரங்குகளும், சிறார்களுக்கான அரங்கமும் அமைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;