districts

img

சேர்வைக்காரன் பட்டியில் சர்வதேச பெண்கள் தின கொண்டாட்டம்

விருதுநகர், மார்ச் 27- அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் மற்றும்  இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கம் சார்பில் சேர்வைக் காரன்பட்டி கலையரங்கில்  சர்வதேச பெண்கள் தின விழா நடைபெற்றது. இந்நிநிகழ்ச்சிக்கு மாதர் சங்க ஒன்றியத் தலைவர் தங்கேஸ்வரி, வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் நல்லு சாமி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்டத் தலை வர் எஸ்.தெய்வானை, மாவட்  டச் செயலாளர் என்.உமா மகேஸ்வரி ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாநில செயலாளர் எஸ்.லட்சுமி வரவேற்புரையாற்றினார். துவக்கி வைத்து வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.கருப்பசாமி பேசினார். சிஐடியு மாவட்ட பொருளா ளர் வி.ஆர்.செல்லச்சாமி, சிபிஎம் வடக்கு ஒன்றிய செய லாளர் ஆர்.முத்துவேலு ஆகி யோர் வாழ்த்துரை வழங்கி னர். மாதர் சங்க மாநில பொதுச்  செயலாளர் ஏ.ராதிகா சிறப்பு ரையாற்றினார்.   இதில், விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ரெங்கநாதன், விதொச ஒன்  றியச் செயலாளர் ராஜேந்தி ரன்,   ஊராட்சிமன்ற துணைத் தலைவர் மணிகண்டன்,  தீபா, ராஜலட்சுமி உள் ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக பாலர் பூங்கா குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் பங் கேற்றனர்.

;