மதுரை, பிப்.13- பாதுகாப்புச் சட்டத்திற்கு விரோதமாகச் சாலையோர வியாபாரிகளை வலுக்கட்டா யமாக அப்புறப்படுத்தும் போக்கை காவல்துறை- உள்ளாட்சி அமைப்புகள் கை விட வேண்டும் என மதுரை நகர் (சிஐடியு) சாலையோ ரம் மற்றும் மார்க்கெட் விற் பனையாளர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது, இது தொடர்பாகச் சங் கத்தின் சாலையோரம் மற் றும் மார்க்கெட் விற்பனையா ளர் சங்க மாவட்டத் தலை வர் மோகன், பொதுச்செய லாளர் எஸ்.சந்தியாகு, துணைப் பொதுச் செயலா ளர் செல்வம், பொருளாளர் ராதாகிருஷ்ணன், சிஐடியு மாவட்டத் தலைவர் இரா.தெய்வராஜ் ஆகியோர் மதுரை ஆட்சியரிடம் திங்க ளன்று மனு அளித்தனர். மனுவில், சாலையோர வியாபரிகளின் நகர் வெண் டிங் கமிட்டியில் 15 பேரில் ஆறு பேர் சாலையோர வியா பாரிகள் என்பதை மூன்றில் இரண்டு பங்கு என மாற்றம் செய்ய வேண்டும். தமிழக அரசாணை 159/2005 குறித்து அரசு அதிகாரிகள், காவல் துறைக்கு முறையான பயிற்சியளிக்க வேண்டும். சாலையோர வியாபாரி களுக்கு வழங்கப்படும். இல வச தள்ளு வண்டிகளை வெண்டிங் கமிட்டி ஆலோ சனையுடன் முறைகேடு இல் லாமல் வழங்க வேண்டும். பாதுகாப்புச் சட்டத்திற்கு விரோதமாகச் சாலையோர வியாபாரிகளை வலுக்கட்டா யமாக அப்புறப்படுத்தும் போக்கை காவல்துறை- உள்ளாட்சி அமைப்புகள் கைவிட வேண்டும். மதுரை மாநகர் காவல் துறை போக்குவரத்துத் துணை ஆணையர் திடீர் திடீரெனச் சாலையோர வியாபாரி களைச் சட்டத்திற்குப் புறம் பாக அப்புறப்படுத்தி வருகி றார். மீனாட்சியம்மன் கோவில் தெரு, நவபத்கானா தெருக்களில் சாலை வியா பார வியாபாரிகள் அப்புறப் படுத்தியுள்ளார். அப்புறப் படுத்தப்பட்ட இடத்தில் மீண்டும் வியாபாரம் செய்ய அனுமதியளித்துச் சாலை யோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாது காக்க வேண்டும்” மனுவைப் பரிசீலித்த ஆட்சியர், சாலையோர வியாபாரிகள் கணக்கெ டுப்பு நடைபெற்று வரு கிறது. இந்தத் தருணத்தில் காவல்துறை-மாநகராட்சி நிர்வாகம் வேறு நடவடிக்கை களை மேற்கொள்ளக் கூடாது. அவர்கள் கடை நடத்துவதற்குச் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் இடையூறு செய்யக்கூடாது என உத்தர விட்டார்.