districts

img

பெருங்குடி கிடங்கில் குப்பை கொட்டுவதை தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பெருங்குடி கிடங்கில் குப்பை கொட்டுவதை தடை செய்ய வலியுறுத்தி சனிக்கிழமையன்று (ஜன.21) துரைப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துரைப்பாக்கம் குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பிரான்ஸ்சிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், செயலாளர் உதயகுமார், சோழிங்கநல்லூர் தொகுதி குடியிருப்போர் நலச்சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் டி.ராமன், பார்த்திபன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத் தலைவர் மோகன் உள்ளிட்டோர் பேசினர்.