திண்டுக்கல், மார்ச் 29- திண்டுக்கல் மாமன்ற கூட்ட பட்ஜெட் நகல் தமிழில் அச்சடித்து வழங்க வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன் சிலர்கள் மன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர். திண்டுக்கல் மாமன்ற பட்ஜெட் கூட்டம் புதனன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் தலைமை வகித் தார். துணை மேயர் ராஜப்பா முன் னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பட்ஜெட் நகல் ஆங்கிலத்தில் இருந் தது கண்டு மன்ற உறுப்பினர்கள் பட்ஜெட் நகல் தமிழில் இருக்க வேண்டும் என்று பேசினர். சிபிஎம் கவுன்சிலர் கே.எஸ்.கணேசன் பேசுகையில், நீதிமன்றங் களில் வழக்காடு மொழியாக தமிழ் வேண்டும் என்று கேட்டுக்கொண்டி ருக்கிறோம். அப்படிப்பட்ட சூழ் நிலையில் திண்டுக்கல் மாமன்ற பட்ஜெட் ஆங்கிலத்தில் இருப்பது நல்லதல்ல. நான் சாதாரண பாம ரன், எனவே எனக்கு புரியும் தமிழ் மொழியில் பட்ஜெட் நகல் தர வேண் டும். இந்த பட்ஜெட் பற்றாக்குறை பட்ஜெட்டாக உள்ளது. வருவாயை பெருக்க எந்த நடவடிக்கையும் இந்த பட்ஜெட்டில் குறிப்பிடப்பட வில்லை. வருகிற காலங்களில் வரு வாய் பெருக்க என்ன ஏற்பாடு உள் ளது? ஓய்வு பெற்ற மாநகராட்சி பணி யாளர்களுக்கு, துப்புரவு பணியா ளர்களுக்கு பணப்பலன்கள் ரூ.22 கோடி பாக்கி உள்ளது. இந்த பாக்கி யை உடனடியாக வழங்க வேண் டும். அதே போல் மின்வாரியத்திற்கு ஒரு கோடி ரூபாய் பாக்கி உள்ளது. ஒப்பந்தக்காரர்களுக்கு பல கோடி ரூபாய் பாக்கி உள்ளது. பட்ஜெட் டில் இந்த செலவினங்கள் பற்றி எது வும் குறிப்பிடவில்லை. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு பணம் செலுத்தி குடிநீரை மாநகராட்சி விலைக்கு வாங்குகிறது. ஆத லால் மாநகராட்சிக்கு சொந்தமான ஆத்தூர் காமராஜர் அணையை ஆய்வு செய்து அந்த தண்ணீரை முழுக்க பயன்படுத்த வேண்டும். மேலும் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் இந்த முதல் பட்ஜெட் கூட்டத்தில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர் கலந்து கொள்ளாதது வருத்தம ளிக்கிறது. முறைகேடாக பாதாள சாக்கடை இணைப்பு கொடுத்தது, குடிநீர் இணைப்புகள் கொடுக்கப் பட்டுள்ளது. அதனை முறைப் படுத்தி வருவாயை பெருக்க வேண் டும் என்று வலியுறுத்தினார்.
வரி வசூல் ரூ.7 கோடி பாக்கி
சிபிஎம் கவுன்சிலர் எஸ்.ஜோதி பாசு பேசுகையில், குறைந்தபட்சம் பட்ஜெட் அஜெண்டா நகல் 7 தினங் களுக்கு முன்பு கொடுக்க வேண் டும். முதல் நாள் மாலை தான் அஜெண்டா தருகிறார்கள். தமிழ் நாடு அரசு கொள்கைக்கு எதிராக தமிழில் அல்லாமல் 90 விழுக்காடு ஆங்கிலத்தில் இந்த பட்ஜெட்; அறிக்கை உள்ளது. இதனை தமி ழாக்கம் செய்து மாற்றுத் தேதி அறி வித்து கூட்டம் நடத்த வேண்டும். வரி வசூல் ரூ. 7 கோடிக்கு பாக்கி உள்ளது. கம்ப்யூட்டர் நெட் கிடைக் காத காரணத்தால் வரி செலுத்த வருபவர்கள் 2, 3 மணி நேரம் காத்திருந்து கோபத்தில் சென்று விடுகிறார்கள். மாநகராட்சியில் பணியாற்றும் ஒரு சில ஊழியர்கள் வசூல் செய்த வரி பணத்தை கட்டா மல் உள்ளனர். அவற்றை உடனடி யாக மாநகராட்சியில் கட்ட வேண் டும். 15 ஆவது மானியக்கோரிக்கை யில் ஒரு கோடி ரூபாய் வந்துள்ளது. மிகவும் பின்தங்கிய பகுதிக்கு தார்ச்சாலைகள் அமைக்க இந்த நிதியை பயன்படுத்த வேண்டும். பழனி சாலையில் உள்ள லாரி செட் 4 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இந்நிலையில் நத்தம் சாலை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைத் துள்ளனர். அந்த இடத்தை மாநக ராட்சி லாரி செட்டாக மாற்றி வரி வசூல் செய்ய வேண்டும் என பேசி னார்.
சிபிஎம் கோரிக்கையால் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு
சிபிஎம் கவுன்சிலர் மாரியம் மாள் பேசுகையில், லைன்தெரு விஸ்தரிப்பு ஏரியா பகுதியில் உள்ள மக்களுக்கு நீண்டகாலமாக குடி நீர் பிரச்சனை தீர்ப்பதற்கு புகார் தெரிவித்து வந்தனர்,இந்நிலையில் தற்போது மாமன்றம் இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் தற்போது ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்து குடிநீர் குழாய்கள் பதித்து வருகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோரிக்கையை ஏற்று நட வடிக்கை எடுத்ததற்கு மேயர் மற் றும் துணை மேயர் ஆகியோருக்கு சிபிஎம் சார்பாக நன்றியை தெரி வித்துக்கொள்கிறேன் என்று தெரி வித்தார். (ந.நி.)