districts

img

அரசிடம் மானியமாக நிலம், கட்டடம், நிதி பெற்றுக்கொண்டு தனியார் சொத்தாக மாற்ற முயலும் கல்லூரிகள்

மதுரை, டிச.5-  மக்களின் வரிப் பணத்தில் அரசு மானியமாக  நிலம், கட்டடம், நிதி பெற்று  வளர்ந்து நிற்கும் அரசு உதவி பெறும் கல்லூரிகளை பல்கலைக்கழகம் என்ற  பெயரில் தனியார் சொத்தாக மாற்றும்  செயலை அனுமதிக்கக் கூடாது என தமி ழக அரசை மூட்டா அமைப்பு வலி யுறுத்தியுள்ளது. மூட்டா முதலாம் மற்றும் இரண்டாம்  மண்டலங்களின் ஒருங்கிணைந்த மண்  டல மாநாடு மற்றும் 50-ஆம் ஆண்டு  பொன்விழா மதுரையில் நடைபெற்றது. அ.வில்சன் பாஸ்கர்  தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் அமைப்பின் கொடியை ச.விவேகானந்தன் ஏற்றி வைத்தார். ச.இராதாகிருஷ்ணன் மாநாட்டை துவக்கி வைத்தார். பெ.சு.பெரியசாமிராஜா வரவேற்றார்  யாதவர் கல்லூரி முதல்வர் (பொ)  மு.நாராயணன், பெ.விஜயகுமார்,   மனோகரன், மா.உமயவள்ளி, அ.தி. செந்தாமரைக்கண்ணான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பொதுச்செய லாளர் மு.நாகராஜன் நிறைவுரையாற்றி னார். ஜெ.பெர்மின் ஆஞ்சலோ செல் வின் நன்றி கூறினார்.  மாநாட்டில், மதுரை காமராசர் பல்க லைக் கழகக் கல்லூரி 10 ஆண்டுகள் பணிநிறைவு செய்த ஆசிரியர்களுக்கு ஆட்சிக்குழுத் தீர்மானத்தின்படி ரூ. 25 ஆயிரம்  வழங்க வேண்டும். அலுவல கப் பணியாளர்களுக்கும் ஆட்சிக்குழுத் தீர்மானத்தின்படி ஊதிய உயர்வு  வழங்க வேண்டும், உதவி ஆசிரியர் களுக்கு யுஜிசி வழிகாட்டலின்படி ஊதியம் வழங்கி பணி வரையறை செய்ய வேண்டும்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரியை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும். அங்கு பணியாற்றி வரும்  இணை மற்றும் உதவிப் பேராசிரியர் கள், உதவி ஆசிரியர்கள், கௌரவ விரி வுரையாளர்கள், அலுவலர்கள், அலு வலக ஊழியர்கள் அனைவருக்கும் பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும்.  வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மாணவர் சேர்க்கை முதல் மதிப்பெண் பட்டியல் வரை மாணவர் சார்ந்த அரசு விதிகள் எவற்றையும் மதிக்காமல் மாணவர்களுக்கு விரோதமாக நடந் துள்ளது.  அரசு விதிகளைப் பின்பற்ற வலியுறுத்தியதற்காக தொடர்ந்து ஆசி ரியர்களைப் பழிவாங்கும் நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது.  ஆசிரியர்களுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் சிவகாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் தலை மையிலான நா.ம.ச.ச வெள்ளைச்ந சாமி நாடார் கல்லூரி நிர்வாகத்தின் மீது  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும், தொடர் கட்டணக் கொள்  ளையால் பாதிக்கப்பட்டுள்ள மாண வர்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட கட்  டணத்தை மாணவர்களுக்கே திரும்ப வழங்க அரசு ஆவன செய்ய வேண்டும்.

மதுரை சமூக அறிவியல் கல்லூ ரிக்கு தமிழக அரசு  சிறப்பு அலு வலரை நியமித்த பின்னரும் கல்லூரி நிர்வாகத்தில் தலையிடும் முன்னாள் நிர்வாகிகளின் மீது தமிழ்நாடு அரசு குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்  டும்.  உசிலம்பட்டி பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் கல்லூரி  தொடர்ந்து சட்ட விரோத தற்காலிகப் பணிநீக்கம் மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு களை  சரி செய்ய வேண்டும். மாணவர் களிடம்  அரசு நிர்ணயித்துள்ள கட்ட ணத்தையே வசூலிக்க அரசு உத்தரவிட வேண்டும். வக்பு வாரியக் கல்லூரி 17 ஆசிரி யர்களுக்கு வழங்க வேண்டிய  வருடாந்  திர ஊதிய உயர்வை வழங்க  வேண்டும். அனைத்துப் பிரிவு மக்களின் வரிப்  பணத்தில் அரசு மானியமாக  நிலம், கட்டடம், நிதி பெற்று வளர்ந்து நிற்கும் அரசு உதவி பெறும் கல்லூரிகளை பல்க லைக்கழகம் என்ற பெயரில் தனியர் சொத்தாக மாற்றும்  செயலை அனும திக்கக் கூடாது. அரசு உதவி பெறும் தியாகராசர் பொறியியல் கல்லூரியில் சுயநிதிப்பிரி வைச் சேர்ந்த முதல்வர், அலுவலகக் கண்காணிப்பாளர்  இருப்பது முற்றி லும் சட்ட விரோதம். உடனடியாக அரசு  உதவிபெறும் பிரிவில் பணிமூப்பில் உள்ள ஆசிரியர் அலுவலர்களை அந்தப் பொறுப்புகளில் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.