மதுரை, பிப்.26- மதுரை மாவட்டம் சாத்தமங்கலம் ஆவின் பால் உற்பத்தி நிலையத்தில் பால் வளத்துறை அமைச்சர் ச.மு.நாசர் பிப்ரவரி 26 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது ஒன்றியத்தின் பண்னை மற்றும் பால் பை நிரப்பும் பகுதிகளையும், அங்கு பணிபுரியும் பணியாளர்கள் சுத்த மாகவும், சுகாதார முறையிலும் பணிபுரி வதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் மதுரை மற்றும தேனி மாவட்டங்களைச் சேர்ந்த பொது மேலா ளர்கள், துணைப்பதிவாளர்கள், துறை தலைவர்கள் மற்றும் களப்பணியாளர்கள் ஆகியோர்களுடன் திறனாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. பால் கொள்முதலை உயர்த்தி, பால் விநியோகம் தடையின்றி நடைபெற களப் பணியாளர்களை சிறப்புடனும், சுறு சுறுப்புடனும், செயல்பட அறிவுறுத்தினார். மேலும் தரமற்ற பாலை கையாலும் தனி யார் மீது உணவு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவரை கேட்டுக்கொண்டார். ஆணையர் அறி வுறுத்தும் போது தனியார்களுக்கு பால் அனுப்பும் சங்கங்கள் மீது துறைரீதியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளும்படி துறைபதிவாளர் (பால்வளம்) மற்றும் பொதுமேலாளருக்கு அறிவுறுத்தினார். மேலும் மொத்த பால் குளிர்விக்கும் நிலை யங்கள் மூலம் தரமான பால் கொள்முதல் செய்வதை உறுதிபடுத்த வேண்டும் என பொதுமேலாளர் மற்றும் களப்பணியா ளர்களை கேட்டுக்கொண்டார். ஒன்றியத்தின் பால் பை நிரப்பும் பிரிவு களில் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்த விதி களின்படி சரியான எண்ணிக்கையில் தொழி லாளர்களை உரிய நேரத்தில் வழங்க வேண் டும் எனவும், தவறும் பட்சத்தில் ஒப்பந்த தாரர்கள் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ளும்படி பொதுமேலாளருக்கு அறி வுறுத்தினார். மேலும் பால் விநியோக வழித்தட ஒப்பந்ததாரர்கள் பால் குறித்த நேரத்தில் நுகர்வோருக்கு சென்றடைய ஆவினுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி யும் தவறும் பட்சத்தில் அவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ச.மு.நாசர் தெரிவித்தார். இதில் ஆவின் மேலாண் இயக்குநர் சுப்பையன், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மதுரை மற்றும் தேனி மாவட்ட ஆவின் பொதுமேலாளர்கள், துறைப்பதிவாளர்கள், துறைதலைவர்கள் மற்றும் களப்பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.