750 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்: 3 பேர் கைது
வெம்பக்கோட்டை, மார்ச் 30- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ளது ஆலங்குளம். இப்பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட னர். அப்போது அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை மறித்து சோதனையிட்டனர். அப்போது அதில், 750 கிலோ ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, வாகனம், மற்றம் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ரேசன் அரிசியை கடத்திய கோவில்பட்டியை சேர்ந்த கொம்பையா, மந்திரமூர்த்தி, ஓட்டுநர் செல்லத்துரை ஆகிய 3 பேரை கைது செய்தனர்.'
லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலி
சின்னாளப்பட்டி, மார்ச் 30- திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டியைச் சேர்ந்தவர் தர்மேந்திர சர்க்கார் (36) .இவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் உள்ள அரசு கேபிள் டிவி நிறு வனத்தில் தொழில்நுட்ப உதவியாளராக தற்காலிக பணி யாளராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. மார்ச் 30 வியாழனன்று காலை தன் மனைவி மற்றும் குழந்தை யுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பள்ளபட்டி அடுத்துள்ள பொட்டிசெட்டியபட்டி பிரிவில் அதி வேகத்தில் பின்னால் வந்த கண்டெய்னர் லாரி ஓட்டுனர் திடீரென அடித்த ஹாரன் சத்தத்தால் நிலைதடுமாறி பேரி கார்டில் மோதி தூக்கிவீசப்பட்டார். அவரது மனைவியும் குழந்தையும் சாலைக்கு வெளியே தூக்கிவீசப்பட்டு காய மடைந்தனர். லாரியின் பின்பகுதியில் இருசக்கர வாக னத்துடன் சிக்கிய தர்மேந்திரன் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தாதரவென இழுத்து சென்றதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயங்களுடன் உயிர் தப்பிய மகள் மற்றும் மனைவி ஆகிய இருவருரையும் அம்மையநாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி சிகிச்சையளித்து, மேல்சிகிச்சைச்காக திண்டுக்கல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் குருவாத்தாய் மற்றும் சார்பு ஆய்வாளர் ஷேக்முகமது ஆகியோர் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுனர் பாரதி (49) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரில் தூங்கிய ஊர்க்காவல்படை அதிகாரியின் துப்பாக்கி- பணம் திருட்டு
மதுரை, மார்ச் 30- கன்னியாகுமரி மாவட்டம் கப்பியறை அரசுவிளை பகுதியைச் சேர்ந்தவர் அன்பையா மகன் பிளாட்பின் (44). பல் மருத்துவரான பிளாட்பின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊர்க்காவல் படை தளபதியாகவும் உள்ளார். இவர் தனது பாதுகாப்புக்காக, காவல்துறை யிடம் அனுமதி பெற்று பிஸ்டல் வகையைச் சேர்ந்த கைத்துப்பாக்கி வைத்துள்ளார். இந்நிலையில் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு பிளாட்பின் புதனன்று காரில் வந்தார். இரவில் மதுரை சிந்தாமணி யில் உள்ள சுங்கச்சாவடி அருகே காரை நிறுத்தி தூங்கி யுள்ளார். பின்னர் எழுந்து பார்த்தபோது காரின் பின்பகுதியில் வைத்திருந்த கைத்துப்பாக்கி, 10 தோட்டாக்கள், ரூ.2.40 லட்சம் மற்றும் ஏடிஎம் அட்டை கள் ஆகியவை திருடுபோனது தெரிய வந்தது. இதுதொடர்பாக பிளாட்பின் அளித்த புகா ரின்பேரில் கீரைத்துறை காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த பிரபல திருட்டுக்கும்பல் கைத்துப்பாக்கி மற்றும் பணத்தைத் திருடிச்சென்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து காவல்துறை யினர் இரவோடு இரவாக திருச்சி ராம்ஜி நகருக்கு சென்று இருவரைப் பிடித்து மதுரைக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ரூ.1.89 லட்சம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரையில் 4 நாட்கள் வரி வசூல் மையங்கள் செயல்படாது
மதுரை, மார்ச் 30- மென்பொருள் பதிவேற்றம் பணி நடை பெறுவதால் மதுரை மாநகராட்சி வரி வசூல் மையங்கள் நான்கு நாட்கள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் சொத்து வரி, குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை பராமரிப்பு கட்டணம் ஆகிய வரி வருவாய் இனங்கள் மூலமும், வரியில்லாத வருவாய் இனங்கள் மூலமும் மாநகராட்சியில் பல்வேறு அடிப்படைவசதிகளும், பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது. சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநர கம் மூலம் 2024-25 ஆம் ஆண்டிற்கான மென்பொருளில் (Urban Tree Information System – UTIS) புதிய பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற இருப்பதால் மார்ச் 31 இரவு 10 மணி முதல் எதிர்வரும் ஏப்ரல் 4 வரை ஆகிய நான்கு நாட்களுக்கு மாநகராட்சியில் செயல்படும் வரி வசூல் மையங்கள் மற்றும் ஆன்லைன் சேவைகள் செயல்படாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எனவே பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பராமரிப்புக் கட்ட ணம் உள்ளிட்ட இதர வரிகளை எதிர்வரும் ஏப்ரல் 5 முதல் மாநகராட்சி வரிவசூல் மையங்களில் செலுத்தி தொடர்ந்து மாநக ராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு முழு ஒத்து ழைப்பு தருமாறு மதுரை மாநகராட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கும்பக்கரை அருவியில் 3 ஆவது முறையாக வெள்ளம் அபாய ஒலி எழுப்பும் கருவி பொருத்த முடிவு
தேனி, மார்ச் 30- மேற்கு தொடர்ச்சி மலை கொடைக்கானல் மலைப்பகுதியில் திடீர் மழை பெய்து வருவதை கொடைக்கானல் வனச்சரக அதிகாரிகள் தேவ தானப்பட்டி வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவே முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக மதியம் 2 மணி முதல் கும்பக்கரை அரு வியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை அருவிப்பகு தியில் இருந்து வெளியேற்ற துவங்கினர் இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டு கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கான மாலை 4 மணி வரையிலான அனுமதி நேரம் முடிவடைந்தது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த திடீர் மழை யால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து கும்பக்கரை அருவியில் மூன்றாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவியிலிருந்து வெளியேற்றப்பட்டதுடன் அரு விப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று பார்ப்பதற்கும் அருவியில் குளிப்பதற்கும் தடைவிதித்து தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜன் அறிவித்துள்ளார் .வெள்ளப்பெருக்கு சீரானதும் சுற்றுலா பயணி களுக்கு கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு அனுமதி அளிக்க உள்ள தாக வனச்சரகர் டேவிட் ராஜன் தெரிவித்துள்ளார். வனப்பகுதியில் இருந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாய நிலை அறியும் போது அருவியில் குளித்துக்கொண்டு கொண்டிருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு உடனே அறிவிப்பு செய்யும் வகையில் முதற்கட்டமாக அருவிப்பகுதியில் அரை கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒலி எழுப்பக் கூடிய அபாய ஒலி எழுப்பும் கருவி பொருத்துவதற்கான இடத்தேர்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கும்பக்கரை அருவியில் மறுகரைக்கு செல்வதற்காக அருவியின் மையப்பகுதியில் இரும்பினால் ஆன பாலம் அமைத்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் அக்கறை யில் இருந்து இக்கரைக்கு வருவதற்கான பாலம் அமைப்பதற்காகவும் இடம் தேர்வு செய்யப்பட்டது.
முருங்கைக் காய் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி
ஒட்டன்சத்திரம், மார்ச் 30- ஒட்டன்சத்திரம் பகுதியில் முருங்கைக் காய் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், இடைய கோட்டை, மார்க்கம்ட்டி, கள்ளிமந்தையம் உள்ளிட்ட பகுதி களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் செடி முருங்கை மற்றும் மரமுருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் முருங்கைக்காய்க்கு நல்ல விலை கிடைத்து வந்த நிலையில், முருங்கை பயிரிடும் விவ சாயிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் கோடை தொடங்கிய நிலையில் தற்போது முருங்கைக்காய் வரத்து அதிகரித்துள்ளது. ஒட்டன்சத்திரம் மற்றும் மார்க்கம்பட்டியில் வியாபாரி களால் வாங்கப்பட்டு கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்க ளுக்கு லாரிகள் மூலம் அதிகளவில் விற்பனைக்கு அனுப் பப்படுகிறது. தற்போது முருங்கைக்காய் சீசன் தொடங்கி விட்டதால் மார்க்கம்பட்டி மார்க்கெட்டுக்கு உள்ளூர் வரத்து வெகு வாக அதிகரித்துள்ளது. கடந்த நாட்களுக்கு முன்பு முருங்கைக்காய் வரத்து குறைந்ததால், ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.100-க்கு குறையாமல் விற்பனையானது. தற்போது அதிகவரத்தால் நேற்றைய மார்க்கெட் நிலவரப்படி ஒரு கிலோ மரமுருங்கை ரூ.8க்கும், செடி முருங்கை ரூ.15க்கும் மற்றும் கருப்பு முருங்கை ரூ.17க்கும் விசாயிகளிடம் இருந்து வியாபரிகளால் வாங்கப்பட்டது. இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், தற்போது முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடைந்ததால், விவசாயி களிடம் குறைந்தவிலைக்கு வாங்குவதால், காய் பறிப்பு கூலி கூட வரவில்லை. முருக்கைக்காய்களை கால்நடை களுக்கு தீவனமாக கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் வருடம்தோறும் அதிகளவு முருங்கை விளைவிப்பதால் மார்க்கம்பட்டியில் முருங்கை பதப் படுத்தும் நிலையம் அமைத்து அதன் மூலம் முருங்கை யை பவுடராக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் விவசாயி களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கும் இதனால் விவ சாயிகள் பயனடைவார்கள் என்று தெரிவித்தார்.
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
தேனி, மார்ச் 30- தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே குள்ளப்புரத்தை சேர்ந்தவர் பாண்டி(43). கூலித்தொ ழிலாளி. இவ ருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ள னர். கடந்த 3 வருடங்களாக பெரிய குளம் முருகமலை புளியோடை பகுதி யில் டேம் கட்டுவதற்காக பிரபல கட்டு மான நிறுவனமான கேஎம்சி நிறுவனம் காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்து வருகிறது. அந்த நிறுவனத்தில் பாண்டி வேலை செய்து வந்தார் . சம்பவத்தன்று அங்கு வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின் கம்பியில் இருந்து மின்சா ரம் பாய்ந்து பாண்டி தூக்கி வீசப்பட் டார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே பாண்டி இறந்துவிட்டதாக மருத்து வர்கள் தெரிவித்தனர்.