districts

img

சுங்கச்சாவடி தொழிலாளர்கள் 56 பேர் பணி நீக்கம்: முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் அமைச்சர் சிவசங்கர் பேட்டி

பெரம்பலூர், அக்.3 - திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்ப லூர் மாவட்டம் அருகே திரு மாந்துறை சுங்கச்சாவடி, கள்ளக்குறிச்சி அருகே செங் குறிச்சி சுங்கச்சாவடி ஆகிய  இரண்டு சுங்கச் சாவடிகளை யும் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர், ஒன்றிய தரை வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட் கரியின் உறவினர் ஒருவர் வாங்கியுள்ளார்.  அதில் இருந்தே நிர்வாகத் திற்கும், பணிபுரியும் தொழி லாளர்களுக்கும் இடையே பிரச்சனை துவங்கிவிட்டது. தொழிலாளர்களை குறி வைத்து, நிர்வாகம் பல்வேறு  நடவடிக்கைகளை எடுத்துள் ளது. குறிப்பாக எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் தொழிலாளர்கள் சுமார் 56 பேரை நிரந்தரப் பணி நீக்கம்  செய்துள்ளது. இதனால் நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் கடந்த 3  நாட்களாக, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர்.  இந்த அறப்போராட் டத்தில் ஈடுபட்டுள்ள தொழி லாளர்களை, போக்குவ ரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பெரம்ப லூர் சட்டமன்ற உறுப்பினர்  எம்.பிரபாகரன், பெரம்பலூர்  மாவட்ட ஊராட்சி குழு தலை வர் குன்னம் சி.இராஜேந்தி ரன் ஆகியோர் திருமாந் துறையில் உள்ள சுங்கச்சா வடிக்கு நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்த னர். அங்கு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட் டத்தில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை அமைச்சர் சிவசங்கர் கேட்டறிந்தார்.  பின்னர் செய்தியாளர் களிடம் போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறு கையில், “பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.  கடந்த 13 ஆண்டுகளாக இங்கு பணி புரிந்து வந்த 56  தொழிலாளர்களை திடீரென பணி நீக்கம் செய்துள்ளனர். இதன் அலுவலகம் பாண் டிச்சேரியில் அமைந்துள் ளது. நான் மற்றும் தொழி லாளர் நலத்துறை அமைச் சரும் பேச்சுவார்த்தை நடத்தி  வருகிறோம். இந்தப் பிரச் சனை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். தமிழக எம்.பி.க்கள் வாயிலாக மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இந்த தொழிலாளர்களுக்கு தமிழக அரசு துணை நிற்கும்”  என்றார்.