districts

img

அரிசிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதித்த ஒன்றிய அரசை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், ஜூலை 30 - அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு, மாவு, வெல்லம், தயிர் உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்து, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி சலுகைகளை வழங்கி, உழைப்பாளி மக்களின் மீது வரிச் சுமையை ஏற்றிய ஒன்றிய அரசை  கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி  முன்பு நடந்த நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் பி. ரமேஷ் தலைமை வகித்தார்.
திருச்சிராப்பள்ளி 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி தலைமை தபால் நிலை யம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஜங்சன் பகுதி செயலாளர் ரபீக் அஹமது தலைமை வகித்தார். ஆர்ப்பாட் டத்தை விளக்கி மாநிலக் குழு உறுப்பி னர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் பேசினர்.
நாகப்பட்டினம் 
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர்  அஞ்சலக வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கீழையூர் மேற்கு  ஒன்றிய செயலாளர் டி.வெங்கட்ராமன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்கத் தின் மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணி யன் கண்டன உரையாற்றினார்.
மன்னார்குடி
மன்னார்குடி தலைமை அஞ்சலகம்  எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றிய-நகரச் செயலாளர்கள் கே.ஜெயபால், ஜி.தாயுமானவன் தலைமை வகித்தனர். மாவட்ட செயற் குழு உறுப்பினர் டி.முருகையன், சிஐடியு மாவட்ட துணை தலைவர் ஜி. ரெகுபதி, சிஐடியு இணைப்பு சங்க தலை வர் டி.ஜெகதீசன், ஏ.பி. தனுஷ்கோடி  ஆகியோர் பேசினர். மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.குமாரராஜா கண்டன உரையாற்றினார்.
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை அஞ்சலகம் எதிரில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி யின் நகர-ஒன்றிய ஒன்றிய-நகரச் செய லாளர்கள் சி.செல்லத்துரை, கே.பழனிச் சாமி தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு உள்ளிட்டோர் உரையாற்றினர்.
மயிலாடுதுறை 
மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலா ளர் டி.ஜி.ரவி, நகரச் செயலாளர் டி.துரைக் கண்ணு ஆகியோர் தலைமை வகித்த னர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ் மற்றும் மாவட்ட, ஒன்றியக்குழு, கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். குத்தாலத்தில் ஒன்றிய செயலாளர் சி.விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  ஜி.ஸ்டாலின் உள்ளிட்டோர் உரை யாற்றினர். சீர்காழியில் ஒன்றியச் செயலாளர் அசோகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.சிம்சன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

;