புதுச்சேரி,டிச.21- புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை அமல்படுத்தி தமிழை அழிக்கும் வேலையை ஆளுநர் தமிழிசை செய்கிறார். இது புதிய கல்விக் கொள்கையை நுழைக்கும் வேலை. இதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். மதச்சார்பற்ற அணிகள் ஒருங்கிணைந்து போராடுவோம்”என்றார். ஆளுநர் தமிழிசைக்கும், முதல்வர் ரங்கசாமிக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் நிலவி வருகிறது. அரசு நிர்வாகத்தில் கோப்புகள் காலதாமதம், ஆளுநர் தலையீடு உள்ளிட்டவற்றை குறிப்பிட்டே முதல்வர் ரங்கசாமி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் முதல்வர் அனுப்பிய வழக்கறிஞர் நியமன கோப்பில் ஆளுநர் மாற்றி முடிவெடுத்துள்ளது மட்டுமில்லாமல் உண்மைக்கு மாறாக பேசி வருகிறார். புதுச்சேரி சூப்பர் முதல்வராக ஆளுநர் தமிழிசை செயல்படுவதை உறுதி செய்யும் வகையிலேயே முதல்வர் ரங்கசாமி கருத்து புலம்பலாக உள்ளது. டம்மி முதல்வராக உள்ள ரங்கசாமி ஆளுநரையோ, ஒன்றிய அரசையோ எதிர்க்கும் தெம்பு இல்லை என்றும் கூறினார். மாநில அந்தஸ்துக்காக பிரதமரை சந்திக்க முதல்வ ரங்கசாமி எம்எல்ஏ-க்களை தில்லி அழைத்து செல்வாரா? என்றும் ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினால், இந்த 3 மண் குதிரைகளும் காங்கிரஸ் தொண்டர்களோடு போராட்டத்தில் பங்கேற்கத் தயார். அதே நேரத்தில் ரங்கசாமி போராட தயாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.