அறந்தாங்கி, ஏப்.20 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஆளப் பிறந்தான் ஊராட்சியை சேர்ந்த இடையார் கிராமம் சுப்பிர மணியபுரம் தெருவில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் சிமெண்ட் சாலை அமைக்கப் பட்டு இருந்தது. அதை தற்போது ஒரு தனிநபர் முள்வேலி அமைத்து பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத வண்ணம் ஆக்கிரமித்து விட்டார். அந்த ஆக்கிரமிப்பை அகற்ற பலமுறை வட்டாட்சியர், கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் அந்த பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து, பெட்ரோல் கேனுடன் வந்து வட்டாட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து போராட்டம் செய்தனர். இத்தகவல் அறிந்து காவல்துறை யினர் பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். போராட்டக் காரர்களிடம் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.