districts

img

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்.சின்னதுரை எம்எல்ஏ திறந்து வைத்தார்

புதுக்கோட்டை, ஜூலை 1 - புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள ஆத்தங்கரைவிடுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நேரடி நெல்  கொள்முதல் நிலையம் திறப்பதற் கான ஏற்பாடுகளை கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை செய்தி ருந்தார். இதனைத் தொடர்ந்து ஆத்தங் கரைவிடுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம். சின்னதுரை எம்எல்ஏ வெள்ளிக் கிழமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை ஒன்றியக்குழுத் தலைவர் ரெத்தின வேல் என்ற கார்த்திக் மற்றும் ஊராட்சி  மன்றத் தலைவர் கோ.அருணாச் சலம் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.

;